நட்சத்ரன்
நாற்காலியில்
எதிரெதிரே அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறோம்
உன் இதழ்வரிகளை நானும்
என் இதழ்வரிகளை
நீயுமாய்ப் படித்தபடி
பின்
உன் புருவ நேர்த்தியை
நானும்
என்னதை நீயுமாய்
கண்களால் சிலாகித்திருக்கிறோம்
எங்கெங்கோ போய்த்திரும்புகிறது
நம் பேச்சு
அவசியமற்று
கடந்துகொண்டேயிருக்குது
காலம்
நமக்கும் விழத்தான் செய்கிறது
நரை
என்றபோதும்
நாம்
பூரணமாய் வாழ்ந்துவிட்டதாய்
பூரித்திருக்கிறோம்
நம் இமைகளின் அசைவை
எண்ணியபடிக்கு.
நிலாப் பசி
-நட்சத்ரன்
பாயில்
வானம்பார்த்துப் படுத்திருக்கிறேன்
சதா நகர்ந்தபடியிருக்கின்றன
மேகக்கூட்டங்கள்
அவற்றுள்
ஒளிந்து ஒளிந்து
விலகிக்கொண்டிருக்குது
நிலவு
புளியமரக் கிளைகளில்
கும்பலாய் மொய்த்தபடியிருக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்
சமையற் கட்டில்
அடுப்பூதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா
கடைத்தெருபோன
அப்பா
இன்னும் திரும்பவில்லை
நல்லா வாய்பிளந்து
தூங்கிக் கிடக்கிறான்
தம்பி:
அவன் முகத்தில் வழிகிறது
பால்நிலா
வீட்டினுள்ளிருந்து
சூடாய் வெளியேறுது
அடுப்புப் புகையும்
அம்மா வைக்கும்
புளிக்குழம்பு வாசமும்
எனக்கு
பசி வயிற்றைக் கிள்ளுது
கடைத்தெருவிலிருந்து
திரும்பிவருகிறார் அப்பா
லேசாய் இருமியபடி
அவர் கையில் ஒரு
பிரிட்டானியா பாக்கெட்
உனக்குப்பாதி
தம்பிக்குப் பாதி என்று
என்னிடம் நீட்டுகிறார்
இல்லப்பா காலையில்
தம்பியோடயே தின்னுக்கிறேன்
என்கிறேன்
பாக்கெட்டைக் கையில் அணைத்தபடி
இப்போது எனக்குப்
பசிக்கவேயில்லை.
—-
natchatran@yahoo.com
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்