அனந்த்
<>0<>0<>0<>
என்னை நானே தெரிந்துகொண்டு
… இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே
முன்னை நாள்நான் பிறந்ததுமே
… முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக்
கன்னம் வைத்தென் உளம்புகுத்திக்
… ‘கடவுள் இதுதான் ‘ என்றனரே;
சின்னம் அதனை உதறிஎன்றோ
…தெரிவேன் எனக்குள் உண்மையினை ?
கண்ணில் தெரியும் காடுமலை
…கடலும் வானும் கதிரவனும்
எண்ணற் கரிய வகையினிலே
…என்னை ஈர்த்(து) ‘எம் புறஉருவின்
வண்ணத் தடியில் மறைந்திருக்கும்
…மருமம் தன்னை நீதுலக்கின்
திண்ணம் அறிவாய் இறையை ‘எனச்
…செப்பக் கேட்டேன் தினந்தினமும்
கண்ணை மூடி உறங்கையிலே
…கனவில் தோன்றும் காட்சிகளின்
உண்மை உணர்ந்தால் இறையோனின்
…உருவம் தெரியும் எனநினைத்து
மண்ணில் கற்ற மாந்தரிடம்
…வருந்திக் கேட்டும் அடிமனத்தின்
திண்ணம் பெறஓர் வழியின்றித்
…திணறித் தவித்த வேளையிலே
வானம் பிளந்த வகையாக
…மனமும் வெடிக்க அதனூடே
ஊனம் எதுவும் இல்லாமல்
…உவகை ஒன்றே உணர்வாக
மோனம் என்ற மொழிபேசி
…முழுதும் மறந்த நிலையினிலே
நானே இறைவன் எனஅறிந்தேன்
…நாடேன் இனிமேல் யாரையுமே!
====
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்