வேதா மஹாலஷ்மி
விரல் பிடித்து நடக்க வேண்டும்,
நீ விரும்பியதை சமைக்க வேண்டும்,
கதை கதையாய் கதைக்க வேண்டும்,
காலாறத் திரிய வேண்டும்,
காதுக்குள் கொஞ்ச வேண்டும்,
கைபிடித்து தொங்க வேண்டும்,
நீ கவிதை கிறுக்க வேண்டும்,
அதில் பிழை நான் பொறுக்க வேண்டும்,
உன் தமிழைத் திருத்த வேண்டும்,
தலையில் பொய் பேன் எடுக்க வேண்டும்,
கீதம் இசைக்க வேண்டும்,
கிச்சுகிச்சு மூட்ட வேண்டும்,
நீ பாடிக் கேட்க வேண்டும்,
எனக்காய் பதறிப் பார்க்க வேண்டும்,
காலை தினமலரில், காபியில்,
தேநீரில், தினைமாவில்,
தினமும் என் பங்கு வேண்டும்,
மாலை மதி வேண்டும்,
மாடிப்படியாய் நாம் மாற வேண்டும்,
மலர்ந்த உன் நினைவெல்லாம்
மலர்த்திப் பார்க்க வேண்டும்,
அம்மா திட்ட வேண்டும்,
நான் அழகாய் அழ வேண்டும்,
மூன்றாம் நிலவு வேண்டும்,
அது மறுநாள் தெரிய வேண்டும்,
பல்லாங்குழி வேண்டும்,
படைவெட்டி விளையாட வேண்டும்,
பாசம் நிறைக்க வேண்டும்,
அதில் படுத்து நான் உறங்க வேண்டும்,
நான் வளர்ந்த கதையெல்லாம்
உன் வாயாரக் கேட்க வேண்டும்,
வசந்தம் பூக்க வேண்டும்,
என் வயது குறைய வேண்டும்,
உன் வரவுக்காய் பார்த்திருந்த
வெளிளிக் காலை வேண்டும்,
வெளிளமாய் நினைவுகள்
வற்றித் தடம் நிறைக்க,
வறண்டு போய் வலிக்கும் மனசுக்கு..
மருந்தாக மறுத்தாலும்,
மழையாகவேனும், நீ வேண்டும்!
மழலையாய் நான் மாற,
எனக்கே எனக்காய்
அப்பா! உன் மடி வேண்டும்!!
மழையாக நீ வேண்டும் – 2
====
– வேதா மஹாலஷ்மி
விரல் பிடித்து நடக்க வேண்டும்,
நீ விரும்பியதை சமைக்க வேண்டும்,
கதை கதையாய் கதைக்க வேண்டும்,
காலாறத் திரிய வேண்டும்,
காதுக்குள் கொஞ்ச வேண்டும்,
கைபிடித்துத் தூங்க வேண்டும்,
நீ கவிதை கிறுக்க வேண்டும்,
அதில் பிழை நான் பொறுக்க வேண்டும்,
உன் தமிழைத் திருத்த வேண்டும்,
தனிமையில் வருட வேண்டும்,
கீதம் இசைக்க வேண்டும்,
கிச்சுகிச்சு மூட்ட வேண்டும்,
நீ பாடிக் கேட்க வேண்டும்,
எனக்காய் பதறிப் பார்க்க வேண்டும்,
காலை உறக்கத்தில், கனவில்,
கவிதையில், காதலில்,
சின்னச் சிரிப்பில், சிறகுப் பார்வையில்,
மனதில், நினைவில்,
மறக்கவே முடியாமல்..
தினமும் என் பங்கு வேண்டும்,
மாலை மதி வேண்டும்,
மரத்தின் வழி பார்க்க வேண்டும்,
மலர்ந்த உன் நினைவெல்லாம்
மலர்த்திப் பார்க்க வேண்டும்,
அம்மா திட்ட வேண்டும்,
நான் அழகாய் அழ வேண்டும்,
மூன்றாம் நிலவு வேண்டும்,
அது மறுநாள் தெரிய வேண்டும்,
உதட்டைச் சுழிக்க வேண்டும்,
உன் உள்ளம் உருக்க வேண்டும்,
உன் கண்கள் சிவக்க வேண்டும்,
கவிதை பிறக்க வேண்டும்,
பாசம் நிறைக்க வேண்டும்,
அதில் படுத்து நான் உறங்க வேண்டும்,
நீி வளர்ந்த கதையெல்லாம்
உன் வாயாரக் கேட்க வேண்டும்,
வசந்தம் பூக்க வேண்டும்,
என் வயது குறைய வேண்டும்,
உன் வரவுக்காய் பார்த்திருந்த
ஞாயிறு மதியம் வேண்டும்,
வாழ்த்திற்காய் காத்திருந்த
பிறந்தநாள் முழுதும் வேண்டும்,
வெளிளமாய் நினைவுகள்
வற்றித் தடம் நிறைக்க,
வறண்டு போய் வலிக்கும் மனசுக்கு..
மருந்தாக மறுத்தாலும்,
மழையாகவேனும், நீ வேண்டும்!
மழலையாய் நீ மாற,
உனக்கே உனக்காய், மீண்டும்
என் மொத்தமும் பொழிய வேண்டும்!
veda
piraati@hotmail.com
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்