யாழன் ஆதி
====
0
பிரார்த்தனை நேரங்களில்
தரிசிக்கிறேன்
உன்னை.
0
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
பறவைகளாகி உயரப்
பறக்கின்றன என்னிலிருந்து
முற்றும் அற்றுப் போய்விடுமோ
என் கூடென்று
ஓடுடைத்து வெளி வருகின்றன
இன்னும் பறவைகள்.
0
ஓர் ஏரியின் கரையில்
நின்று
நீர்ச்சலனத்தை வரைகிறேன்
எதிலும் பெறமுடியாத
இசையின் வசீகரிப்பில்
கொஞ்சம்
கொஞ்சமாய்
தெளிகிறது உன் முகம்.
0
அவைகளின் எத்தனிப்பில்
சிதைந்து முடிகின்றன
நம் காதலுக்கான சொல்லாடல்கள்
சொற்களுக்கு அப்பாற்பட்ட
ஒன்றினை
தேடிக்கொண்டிருக்கிறேன்
தூரப் பறக்கும்
அந்த பறவையின் சிறகில்.
0
எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும்
பிரித்தறிகிறேன் உன்னை
மழை
குயில்
காற்று
சப்தம் எழுப்பும் எவையும்
தோற்றே போகின்றன
அழகிய உன் ஒலி முன்
சாரல் வாய்க்காத என் மேனியெங்கும்
முளைத்திருக்கின்றன செவிகள்
உன் ஒலியதிர்வுகளுக்காய்
ஒரு நிர்ணயப் பொழுதில்
அவிழத் தொடங்கும் மேகங்களை
அல்லது மொட்டுகளை
அறிமுகப்படுத்துவேன் உனக்கு.
0
இடைவெளிகளின்
ஆழத்தைப் பெயர்க்க முடியாத
என் கைகளுக்கும்
நழுவிப்போய் தவறும்
உன் இருப்புக்கும்
எதனாலோ
தெரிகிறது
நாம் மூடிவைத்திருக்கிற
காதலின் வாசனை.
0
அனுப்பி உதவியவர் -ruminagore@yahoo.com-
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்