கவிதை

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

கோ.கணேசன்


வெள்ளைப் பனி

மஞ்சள் வெயில்

நீல வானம் – என்

பச்சை மனதில் உன்

சிவப்பு இதழ்கள்

கனவுகளுக்காக கனவு கண்ட

கனவுக்காலம் !!!!

நிகழ்காலம் மறந்து வாழ்ந்த

கடந்தகாலம் !!!!

நினைத்துப் பார்த்தால்

சீறி எழும்

நெஞ்சத்து நீர்வீழ்ச்சி

கண்ணில் பெருகும்.

அறியாத உணர்வுகள்

புரியாத மோகங்கள்

எண்ணிப் பார்க்கையில்

நிலைக்காத இன்பங்கள்

கறைந்து போன

கற்பூரம்

பற்றி எறிகிறது

தீப்பந்தமாய்!!

உன் நினைவலைகள்

எழும் பொழுதெல்லாம்

வார்த்தைப் படகுகளை

வசமாக்கிக் கொள்கிறேன்.

ஆணாதிக்க மனதிற்க்குள்

பெண்ணாதிக்கம் செய்தவளே

விடமும் அமுதமாகும்

அறிந்து கொண்டேன் உன்னால்

என் இதயத்துடிப்பை – உன்

இயல்பாக்கிக் கொண்டவளே !!!

இயலவில்லை என்னால்

இயங்குவதற்க்கு !!

பாரடிப் பெண்ணே !!!

விரயமாகிப் போகிறது

காலம் மட்டுமல்ல

என் வாழ்க்கையும் தான்..

இருந்தும் பெண்ணே!!

வாழ்த்துடிக்கிறேன்…எனக்காக அல்ல

என்னுயிரில் வாழும்

உனக்காக…

தலால் தானோ கேட்கிறது

‘பூங்காற்று திரும்புமா ‘ ? ? ?

என் காதுகள் மட்டுமல்ல

என் இதயமும் தான் ….

உன் பதிலினை எதிர்பார்த்து
—-

gganesh@acmet.com

Series Navigation

author

கோ.கணேசன்

கோ.கணேசன்

Similar Posts