கவியோகி வேதம்
நகரத்தை நோக்கி நாம்வந்து விட்டதால்
கிராமம் அழிந்ததுஎன கிறுக்கன் ஒருவன்சொன்னான்!
.
மடையனிவன்!தன்னுடைய வயிற்றுக்காய் நகர்வந்த
முடைநாற்றம் வீசுகிற,மூக்குபொத்தி நீர்உறிஞ்சி,
.
அலைச்சலில் முங்கிவிட்ட, அழகுணர்ச்சி இழந்துவிட்ட
புலையனிதைச் சொல்கையில், புரண்டதடா கவியுணர்வு;
.
கிராமம் என்பது ஆன்மாவின் கிளர்ச்சியடா!
புறாக்களின் கிசுகிசுப்பு!பொழுதெல்லாம் விளையாடும்
.
கள்ளமற்ற சிறுவரின் தெய்வீகக் கொண்டாட்டம்!
புள்ளினங்கள் குட்டிச் சுவரெல்லாம் ஆக்கிரமித்து,
.
தேவ பாை ?களைத் தேனூறப் பேசிநின்று
காவியக் கலவியிலே செங்கல்லுக் குயிரூட்டும்
.
கோடிசுகம்;அதோஅந்த ஆலமரத்தில் தலைகீழாய்த்
தோடிராகம் தொங்கியிசைக்கும் குரங்குத் துள்ளல்!
..
நாளும் சந்தோ ?ம் தொலைத்துவிட்ட நகரத்தான்
தோளில் பையோடு வந்தால் விரட்ட என்றே
..
நாக்கை நீளமாய்த் தொங்கலிட்டு நடுங்கவைத்து
போய்க்கோடா உன்நரகம்! எனத்திருப்பும் அய்யனார்சிலை!
..
கடுங்கோடை யிலும்ஓடும் கடைமாற்று வாய்க்கால்;
பொடிசாய்ப், பளபளத்துக் கொஞ்சுகின்ற மீன்பாய்ச்சல்!
.
புயலின் ஓசையிலே பொலபொலென்று உதிர்ந்தாலும்
குயவன்கையில் களிமண்போல் கொஞ்சூண்டு முதுகுகொண்டு
.
களியாட்டம் போடும்அணில்கட்குக் காப்பிடம் தரும்
ஒளிஓடும் பழங்கோவில்;உள்ளே தன் தேவியுடன்,
.
இடைஞ்சல் ஏதுமின்றி எழில்கொஞ்சல் செய்யும்சிவன்!
படைதிரள வைத்துப் பாசத்தைப் புரளவைக்கும்
.
கிராமத்துத் திருவிழா!என்று… இத்தனை கிளர்ச்சிசெய்யும்,
மராமத்து புரியும் என் மன்மதக் கவிதைக்கும்
.
உயிரூட்டும்,சொர்க்கபுரிக்(கு) ஒளியூட்டும், இதோஇந்த
ஒயிலையா,மயில்தோகை உல்லாசத்தை யா,வந்து
.
அழிந்ததுஎன்று பல்தேய்க்க அடிநீர்இன்றி முனகும்
சுழிஒழிந்த ‘கல்மாடன் ‘ நீ! சொல்லப் போச்சுது ?
.
சுணங்கா! மூச்சடைத்தால் சொர்க்கத்தில் கிஞ்சிற்றும்
உனக்கிடம் கிடையாதடா ஓணானே! போபோ!
****(கவியோகி வேதம்)16-02-04
.
- கவிதை
- மூடல்
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கடிதம் – பிப் 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- கவிதை
- கவிதை
- சிதைந்த நம்பிக்கை
- நெஞ்சத்திலே நேற்று
- நிசப்தத்தின் நிழலில்
- விட்டுசெல்….
- காலத்தின் கணமொன்றில்
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கிராமத்தில் உயிர்!
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கதை ஏன் படிக்கிறோம் ?
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- குழந்தைகளுக்கான கல்வி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- நாகம்
- தாண்டவராயன்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- விடியும்! – நாவல் – (36)
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- தவம்
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- ஃப்ரை கோஸ்ட்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- அவன்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- பத்திரமாய்
- தேவைகளே பக்கத்தில்
- ஒரு கவிதையே கேள்வியாக..
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7