ஒரு கவிதை

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பத்மா அரவிந்த்


கடவுளுக்கு கண்ணில்லை என்று சொல்லும் மானிடரே
கடன் வாங்கி செலவழித்துக் கல்யாணம் செய்திடவே
இடம் இல்லை என்று சொல்லிக் கூரை வேய்ந்து
சடங்குகளைத் தடையின்றி செய்திட நினைத்தீர்.

சட்டங்கள் வரைமுறைகள் மீறிச்சென்று உங்கள்
இட்டம் போல் செயல் செய்து விருந்தும் உண்டார்
பட்ட பொறி கூரை தன்னில் பெரு நெருப்பாய் மாறுமென்று
திட்டமிட மறந்தென்னை குறை இன்று கூறுகின்றீர்

இருமனமும் ஒருமனமாகும் திருமணத்தில் -இலவச
விருந்துண்னவென்று சேரும் கூட்டம் கதைகள் பேசும்
பெருமளவில் கூட்டம் சேர்த்து பொருள் விரயம் செய்யும்
திருமணங்கள் மாறிவிட்டால் பெண்ணின் துயர் தீரும்
—————————————————————-
(ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீவிபத்தின் மீதான செங்காளியின் கவிதை படித்தபின்)
padma.arvind@co.middlesex.nj.us

Series Navigation

author

பத்மா அரவிந்த்

பத்மா அரவிந்த்

Similar Posts