க்ருஷாங்கினி
—————–
மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி
காத்திருக்கும் அருகம்புல்லும்
சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம்
உள் உறிஞ்சி வேர்விட உறங்கும்
அரசும் ஆலும்.
ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி
பறந்து காற்றில் படரும் வேருக்கும்
வெளவால், பறவை கழிவுடன்
வேரையும் உடன் இருத்தி மேலிருந்து
புவி விசையில் கீழ் இறங்கும் கனவிதையும்,
எப்போதும் நசநசத்த ஈரப்பரப்பில்
வேறற்ற காளானும் பாசியும்கூட
மண்ணுக்குள் வீடுகட்டி மேலெழும்பி
மற்றதை அரித்துத் தின்னும்
அள்ளையில் அன்றே முளைத்து, பறந்து
திரிந்து, சில மணியில்
செத்துமடியும் கரையானுக்கு
ஒளித்துளியாய் இறக்கையும்
முளைவிடக் காரணமானது
மழையின் பின்விளைவு.
+++++++++++++++++++++++++++
கூர் முனை கால் வெட்டிப்பின்
தரையில் பிறை நிலா விட்டு
உருண்டு, நிமிர்ந்து
எப்போதும்போல வாயகன்று
நின்றது கிண்ணம்;
விம்மிப் பொங்கிய வெள்ளை நுரை
மீதமிருந்தது அதற்குள்ளேயே.
சிதறியது சிறிதளவே;
கீழிறங்கியது நிமிர்ந்ததெங்கனம்
அறிந்துகொண்டது அக்கணம்
மனம்.
கொள்ளளவு மாற்றம் கொண்டாலும்
விழுந்தெழும் வண்ணம்
உருண்ட அடிப்பாகம் கொண்ட
அனைத்துப் பாத்திரம் வட்ட வடிவமே.
=======================================
nagarajan63@yahoo.com
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- உண்மை ஆன்மீகம்
- அங்கீகாரம்
- பின் விளைவு
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- தேசபக்தியின் தேவை
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- பூமத்திய ரேகை
- சாத்திரமேதுக்கடி ?
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- கவிதை
- உடலில் மாற்றம்.
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- ஈடன் முதல் மனிதம்
- நான் கேட்ட வரம்
- கவிதைகள்
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- காதலர் தினக்கும்மி
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- உன்பெயர் உச்சரித்து
- காதலுக்கோர் தினமாம்
- ஆனந்த ‘வாசன் ‘
- குறியும் குறியீடும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- தேடல்
- துகில்
- இரு கதைகள்
- விடியும் -நாவல்- (35)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- புதிய சாதிகள்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- ஒரு கவிதை
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- முதலா முடிவா ?
- கண்ணா நீ எங்கே
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?