கவிதைகள்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பாஷா


1.
கோபமாய்,கெஞ்சலாய்
அழுகையாய்,ஆத்திரமாய்
உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது
என்னில் நீ நிரைத்து
வைத்த காதல்!

2.

நட்சத்திரங்கள் தொலைந்த
நள்ளிரவு நேரம்
நிலா இல்லாத வானம்
கன்னம் வருடிப்போகும்
தென்னங்காற்று
என் வீட்டு மாடியிலமர்ந்து
நீயில்லா நிமிடங்களை
தீயிட்டுக்கொண்டிருக்கிறேன்

நான்
இருக்கும்போதெயென்னை
இறக்கும் நிலையெய்ய
செய்துவிட்டாய்.
அனிச்சையாக நடக்கும்
உடலின் இயக்கங்கள்
நான் இறந்தவனாகவே
கட்டியம் கூறுகின்றன
இறப்பு துயறமானதுதான்
இருந்தபோதும்
நீ
எடுத்து தந்ததால்
ஏற்றுக்கொள்கிறேன்!
——————————-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

author

பாஷா

பாஷா

Similar Posts