மீண்டும் சந்திப்போம்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

கற்பகம்.


———————-
கனவுக்குள் இருந்து
நான் தினமும் உன்னை
அழைக்கின்றேன்.
கருப்பும் வெள்ளையுமாய்
அங்கே
என் முகம் …
அதனால்
உன் கண்களுக்குத்
தெரிவதில்லையோ ?!

ஓசைப்படாமல்
குரலெழுப்ப முடிவதில்லை
அதனால்
என் மெளனப்
பார்வைகளும்
உனக்குப்
புரிவதில்லையோ ?!

ஒரே நொடியில்
இரயிலைக் கோட்டைவிடும்
அரியவர்களின்
பட்டியலில்
நமக்கும்
நிரந்தர
இடம் ஒதுக்கிவிடுதா ?

இந்த மங்கலான கனவுகள்
எப்பொழுதாவது தெளிந்து
உறக்கத்தில் இருந்து
உணர்வுக்குள் உவந்து
நாம் விழிக்கும் பொழுதொன்றில்
மீண்டும் சந்திப்போம்.

Series Navigation

author

கற்பகம்

கற்பகம்

Similar Posts