சத்தி சக்திதாசன்
கண்களிலே தோன்றியபோதும்
தெரியவில்லை
இதயங்களை இடம்
மாற்றிய பின்னும்
இயம்பவில்லை
நிழலாக உன்னைத்
தொடர்ந்த போதும்
தோன்றவில்லை
இரவலாகத்தான் கேட்டேன்
இனி எனக்குத் தேவையில்லை
என்றன்று நீ
கசக்கிப் பின் திரும்ப
தந்தபோதும்
கூறவில்லை
ஆகாயத்திலே மின்னும்
துருவ நட்சத்திரமாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கும்
இப்போதாவது சொல்வாயா
என்
காதலுக்கு என்ன விலை ?
உள்ளத்தால் உன்னை
உண்மையாய்
நேசித்ததிற்கு
உன்பாதம் வலிக்கக்கூடாதென்று
நீ நடக்கும் பாதையெங்கும்
ரோஜா இதழ்களால்
மெத்தை போட்டததற்காக
பேரூந்து வண்டியிலே
பேதையுனக்கு இடமில்லை என்றே
நானும் உன் பின்னே
பாடசாலை நோக்கி நடந்ததிற்காக
எட்டாத தொலைவில் வண்ணநிலவாக
வலம்வரும்
இப்போதாவது சொல்வாயா
என்
காதலுக்கு என்ன விலை ?
உடைந்த இதயத்தை
ஒட்ட வைப்பதற்கு
இழந்த இன்பத்தை
ஈடுசெய்வதற்கு
தொலைத்த
சுயமரியாதையை
கண்டுபிடிப்பதற்கு
இதயத்தின் ஓரங்களிலே
ஒட்டிக்கொண்டிருக்கும்
சோகக்கீறல்களெனும் ஓட்டடையை
தட்டுவதற்கு
தயக்கம் சிறிதுமின்றி
தனக்கென ஓர்
வழ்க்கையைத் தேடிக்கொண்ட
இப்போதாவது சொல்வாயா ?
நானதற்கு
கொடுக்கும் கூலியும்
என்
காதலின் விலையும்
ஒன்றுதானென்று
—————————
sathnel.sakthithasan@bt.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- மா ‘வடு ‘
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- எம காதகா.. காதலா!
- கவிதைகள்
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?