கோபம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

கவிநயா


அகிலம் யாவும் அழியும் வண்ணம்
ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து
சடசட வென்று கிளைகள் முறித்து
கடகட வென்று காடுகள் அழித்து
தடதட வென்று வேகம் எடுத்து
படபட வென்று வெடியாய் வெடித்து
பாதை நெடுகப் பாறைகள் பெயர்த்து
பார்ப்போ ரெல்லாம் பயந்திடச் சுழித்து
கருணை இன்றிக் கண்டவை மிதித்து
கல்லும் முள்ளும் காலால் பொடித்து
நேசம் மறந்த நெஞ்சாய்க் கொதித்து
நெற்றிக் கண்ணின் நெருப்பாய்த் தகித்து
மனதில் மிகுந்த கருவம் கனன்றிட
மலையைப் புரட்டும் மமதை கொண்டு
பொங்கிப் பாயும் புதுவெள்ள மென
புன்னகை கொன்று பிறந்தது கோபம்


meenavr@hotmail.com

Series Navigation

author

கவிநயா

கவிநயா

Similar Posts