மதியழகன் சுப்பையா
1.
ிற்பங்களோடு
ஓவியங்களோடு
புகைப் படங்களோடு
புணரத்துடிக்கிறேன்
புத்தகங்களை
முகர்ந்துவிட்டு
மூடி விடுகிறேன்
கிள்ளி எறிந்துவிட
நினைக்கிறேன்
விறைத்த உறுப்பை
உறுப்பில் இல்லை
கோளாறு என்பதை
உணருவதே இல்லை.
2.
கட்டம் போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருந்தது
வியர்வையாலும்
இந்திரியச் சகதியாலும்
ஈரமாகிப் போகிறது நாளும்
ஒதுங்கி சுருங்கி விடுகிறது
கசங்கி நைந்து
கிழிந்து விடலாம்
விரைவில்
இன்றும்
சுத்தம் மணக்க
பூப்போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருக்கிறது.
3.
பறவைகளை பிடிக்காது உனக்கு
பூக்களை கசக்கி முகர்வாய் நீ
மழையை திட்டித் தீர்த்திருக்கிறாய்
வீட்டைச் சுற்றிய எல்லா மிருகமும்
உதைப் பட்டிருக்கு உன்னிடம்
அலறல் சங்கீதத்தை
அப்படி ரிப்பாய்
எப்படி அழைக்கிறாய்
‘டேய்! செல்லம்! என.
4.
நான் தனிமையில்
இருக்க வேண்டும்
முதலாளியின் கட்டளைகள்
பீயைப் போல்
துடைத்து விடு
நண்பர்களின் நினைவுகள்
இறகு போல்
பிடுங்கி விடு
குடும்பத்தாரின் பரிவுகள்
மலர்களைப் போல்
கிள்ளிவிடு
உடல் துவாரங்கள்
வழியாய் என்னுள்
ஊற்றி நிறை
நான் தனிமையில்
இருக்க வேண்டும்
உன்னில் மிதந்தபடி.
5.
இதுவரை
நான் பெற்ற
முத்தச்சுகங்களை
மொத்தமாய்
ஓர் நாள் உன்னிடம்
ஒப்புவிக்கையில்
வெளியில் ிரித்து
உள்ளுக்குள்
அழுதிருப்பாய்.
6.
நான்கடி விலகி நின்று
பேிய போது
தோளில் கைப் போட்டபடி
நடந்த போது
கெஞ்ிக் கேட்டு
முத்தம்
கொடுத்த போது
பெற்ற போது
சந்திப்புகளில் பரிசுகளை
திணித்த போது
மணிக் கணக்கில்
காத்திருந்த போது
பல நிலைகளில்
மெளனமாய் இருந்து விட்டு
உடல் பிசைந்து
உச்சம் கண்ட
ஒரு பொழுதில் கேட்டாய்
‘இதுதான் காதலா ? என .
7.
பகல் முழுவதும்
தேக்கி வைத்து
இரவில் ஈரப் படுத்துகிறாய்
எச்ிலில் ஊறி
உருவான புழுக்கள்
பியால் நெளிகிறது
வீடெங்கும்
நொடிப் பொழுதுகளில்
வடிந்து விடுகிறது
உன் காதல்
துளிகளாய்
உன் காதல் சுனை
வற்றி வரண்டு
போய்விடும் நாளில்
துவங்கிடக் கூடும்
என் காதல்.
8.
நேற்றைய
நகக்கீறல்களோடு
இன்றையதை ஒப்பிட்டு
உறுதி செய்து கொண்டாய்
நாயாய் முகர்ந்து
நாற்றத்தில்
மாற்றமில்லையென
அறிந்து மகிழ்ந்தாய்
வழக்கமான் இரு
வார்த்தைகளை
கூறினாய் கரகரப்புடன்
உடலை உருவிக்கொண்டு
சோர்ந்து விழுந்தாய்
கோடாய் வழிகிறது
உன் காதல்.
9.
என் ஏவல்களை
கடமையாகக் கொள்கிறான்
என் அலங்காரங்களால்
கலவரப் பட்டிருப்பான்
என் இயல்பான
தொடுடல்களை
தெய்வத்தின் தீண்டுதலாய்
உணர்வான் போலும்
ிலிர்த்துக் கொள்வான்
உள்ளாடையின் கொக்கி
மாட்டிவிட்டது முதல்
முகம் பார்த்து பேசுவதில்லை
இப்பொழுதெல்லாம்
அக்காவென்று விளிக்காமலே
பேச முனைகிறான்.
madhiyalagan@rediffmail.com
http://madhiyalagan.blogspot.com
- விடியும்!-நாவல் – (28)
- யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘
- அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்
- வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
- அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
- கலைக்கண் பார்வை
- தேவகுமாரன் வருகை
- உத்தரவிடு பணிகிறேன்
- வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘
- அர்த்தமுள்ள நத்தார்
- திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்
- பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
- மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
- ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- அந்தரங்கம் கடினமானது
- கோபம்
- பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
- கடிதங்கள் – டிசம்பர் 25 -2003
- மறுபக்கம்
- ‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- அம்மாயி
- பலகை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- நவீன மதவாதத்தின் முகங்கள்
- முற்றுப் பெறாத ஒரு கவிதை
- தாம்பத்யம்
- கவிதைகள்
- போன்சாய் குழந்தைகள்
- பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
- நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி
- சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
- ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
- படிகளின் சுபாவம்