பால்யம்.

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

அருண்பிரசாத்.


கடற்கரையின் ஈரமான
மணற்குன்றுகள் எல்லாம்
உனது மெல்லிய விரல்களை
நினைவுபடுத்துகின்றன.

கட்டி மகிழ்ந்த கோவில்களில்
கோபுரங்களை நான் முடித்தபின்
புறவாயில்களை நீ செதுக்கியபின்
பெருமையுடன் நிமிரும் உனது நெற்றியில்
மண்தோய்ந்த முடி தவழ்ந்த காட்சி விரிகிறது.

ஊதி ஊதி பெரிதாக்க முடிகிறது
பல பலூன்களை.
தொலைந்த பால்யத்தைத்தான்
முழுமையாய் உணரமுடிவதில்லை.

everminnal@yahoo.com

Series Navigation

author

அருண்பிரசாத்

அருண்பிரசாத்

Similar Posts