தமிழ்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

சித்தாந்தன்


அதிகாலை விடியலையும் பரிதி மறந்தாலும்
ஆண்டும் தான் தொடங்கியே முடிய மறந்தாலும்
இசை பாடும் கருங் குயிலும் பாட மறந்தாலும்
ஈக்களுமே பூக்களயே மொய்க்க மறந்தாலும்
உலகம் தனை எழுப்பிடவே சேவல் மறந்தாலும்
ஊனும் தான் உயிருடனே இருக்க மறந்தாலும்
ஐம் புலனும் தத்தம் செயலை மறந்தாலும்
எட்டு திக்கும் தத்தம் இடத்தை மறந்தாலும்
ஏரி நீரில் மீன்களுமே நீந்த மறந்தாலும்
ஒட்டகமும் பாலை வனத்தை மறந்தாலும்
ஓடமுமே நதி நீரில் மிதக்க மறந்தாலும்
ஒளவை வளர்த்த தண்டமிழை ஒரு நாளும் நான் மறவேனே…!!!
——-
ssangam2@uno.edu

Series Navigation

author

சித்தாந்தன்

சித்தாந்தன்

Similar Posts