ருத்ரா
விக்கிலிங்கபுரத்திலெ இருந்து
அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா
அங்ஙனெ இருந்து
ஊர்க்காடு
செல்லும் பாதேல
தாம்ப்ரபரணிக் கரைக்கு
வல்லாட்டு போட்டாப்ல
கெடக்கும் சாலெ அது.
பக்கத்துல
மல மேல இருக்கும் சாத்தா
பளிங்கு பாய்
விரிச்சாப்ல ஓடுற
தண்ணிய
ஊடுருவிப் பாக்கும்.
தல உச்சியிலே
எலிவால் பின்னல்
போட்டமாதிரி
ஆட்டி ஆட்டி
ஆடுற நாணப்புல்லுக
தண்ணிக்குள்ள
தகிடுதத்தம் போடுறதயும்
பாக்கும் அது.
நீட்ட நீட்டமா
வளந்த அந்த புல்லுக
தொட வரைக்கும்
சீலைய தூக்கிகிட்டு
ஆத்துக்குள்ள
நடக்குற
பொண்டுகளப் போல
தோணும்
அந்த சாத்தாவுக்கு.
ஆத்துக்குள்ள
கொத்து கொத்தா
போய்ட்டிருக்கும்
அயிரைகூட்டங்களை
தன் முண்டக்கண்ணாலயே
பாத்து பொரிச்சு
குழம்புவச்சு சாப்ட்ரதைப்போல
அதுக்கு
ஒரு பூதப்பார்வை!
எதுத்தக்கரையில
கல்ருச்சி ஊரு படித்துறையிலே
சலவைக்காரங்க
வீசி வீசி அடிச்சு
தொவக்கிற
துணிகள்ள கேக்குற
தூரத்து தாளங்க தான்
சாத்தாவுக்கு தாலாட்டு.
எதுக்கால
சாமியாடறவ
துண்ணீரு வீசுனாலும் சரி
வேப்பங்கொள
அடிச்சாலும் சரி
முட்டைய ஊதி
கப்பூரம் கொளுத்துனாலும் சரி
சாத்தா பாட்டுக்கு
தூங்கிட்டு தான் நிக்கி.
அந்த சந்திப்பின்
ஆலமரத்து நிழலில்
குட்டியாய்
இன்னொரு
‘சொள்ள மாட சாமி ‘
புதிதாய் வர்ணம் பூசிய
வெட்டரிவாளை
தூக்கிப்பிடித்துக்கொண்டு
நின்றிருந்தார்.
அறுவாளின் கூர்முனை
வானத்தை
குத்திக்கிழித்ததில்
கிழிந்த மெத்தையிலிருந்து
சிதறிய பஞ்சுகள் போல்
மேகங்கள்.
பீடத்தில்
பிஞ்சுகளாய்
குறும்பாடுகள்.
பீடவிரிசலில்
நீண்டு செழித்த
புல்கற்றைகளை
புசித்துக்கொண்டு
தன் ‘கோலி உருண்டை விழிகளில் ‘
சில கனவுகளின்
சித்திரப்பார்வைகளோடு
அவை அங்கு
திரிந்து கொண்டு நின்றன.
அந்த மேடையின்
இன்னொருபக்கம்
தோல் சுருங்கி
எட்டாய் மடிந்து கிடந்த
ஒரு தொண்ணூற்று
வயதுக்கிழவன்
படுத்துக்கொண்டே
கத்திக்கொண்டிருந்தான்.
‘எலெ மாசானம்
அந்த ஆடுகளப் புடிச்சு
கட்டிப்போடுலெ
இன்னும் ரெண்டு நாள்லெ
கொடெ வருதுலெ. ‘
மானசீகமாய்
பம்பைக்கொட்டு உறுமலும்
பூசாரியின் வெட்டுக்கத்தியும்
அந்த கிழட்டு நாக்கில்
ஜொள் ஊற வைத்தது.
குரலைக் கேட்டு
வெறித்த ஆடுகள்
கிழவனையே
உற்றுப்பார்த்தன.
ஆவேசங்கொண்டு
ஒரு மாறுதலுக்காக
அந்த ஆடுகளின்
கனவுக்காட்சிகள்
தலைகீழாய் மாறின.
அத சூச்சுமமா பாத்த
மலமேல இருக்கும்
அந்த சாத்தாவுக்கு கூட
மொகம் தொங்கிப்போச்சு.
ஏன் ?
இது தான்
அந்த ஆடுகளின் கனவு..
கிழவன் கழுத்தில் மாலை.
மஞ்சத்தண்ணி
தெளிக்கப்பட்டு
வெட்டுக்கட்டையில்
அவன் கழுத்து
அமுக்கிப்பிடிக்கப்பட….
பூசாரியாய் வந்த
ஒரு முரட்டு வெள்ளாட்டின்
கையில்
பளபளப்பாய்
ஒரு வெட்டரிவாள்!
==
=ருத்ரா
epsi_van@hotmail.com
- மல மேல இருக்கும் சாத்தா.
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003
- சிந்தி நகைச்சுவை
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)
- பத்துகேள்விகளும் சில பதில்களும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘
- அம்மா வந்தாள் பற்றி
- இணையத் தமிழ்
- ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)
- கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்
- சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)
- வைரமுத்துக்களின் வானம்-8
- எனையாரென்று அறியாமல்..!!!
- மழையினால் காலம் ஆன போது
- பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு
- காதலாவது, கத்திரிக்காயாவது!
- பாரதி பாடாத பாட்டு
- கறுப்பு நிலா
- உன் குற்றம்
- இது சீனா அல்ல – இந்தியா
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்
- அது
- நிலைப்பாடுகளும், நியாயங்களும்
- ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1
- எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt
- கடிதங்கள் – நவம்பர் 13,2003
- பழி(சி)க்குப் பழி(சி)
- அமானுதம்
- ஆழ்வார்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- கல்லூரிக் காலம் – 7 -செங்கல்
- Bobby Jindal – ஒரு அறிமுகம்
- வித்தியாசமானவன்
- தேர்.
- கவிதைகள்
- மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
- இரைக்கு அலையும் நிகழ்
- ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு
- ஏழையா நான் ?
- தேவையென்ன ?
- குறிப்புகள் சில- நவம்பர் 13 2003
- விடியும்- நாவல் – (22)