சிலநேரங்களில்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

சத்தி சக்திதாசன்


சிலநேரங்களில்
சித்திரங்கள் கூட வெறுமையாகின்றன
சிந்தனைகள் செயலற்றுப் போகின்றன
சிற்பங்கள் கதைகூறத் தவறிவிடுகின்றன – அந்தச்
சிலநேரங்களில்
மனது நிலை கொள்ளத் தவறுகின்றன
மயக்கம் நினைவலைகளை சிறையெடுக்கின்றன
மஞ்சம் முற்களாக உடலைத் துளைக்கின்றன – அந்தச்
சிலநேரங்களில்
தவறுகள் தலைவிரித்து ஆடுகின்றன
தர்மம் தயங்கிப் பின்வாங்குகின்றது
தப்புக்கள் தாண்டவமாடுகின்றன – அந்தச்
சிலநேரங்களில்
மனிதாபிமானம் புதைகுழிக்குள் தள்ளப்படுகின்றது
மரியாதை மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை
மாலைமதியின் வண்ணவெளிச்சம் மங்கி விடுகின்றது – அந்தச்
சிலநேரங்களில்
உண்மை ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தி விடுகின்றது
உள்ளம் கலங்கிய குட்டையாகி குழம்பி விடுகின்றது
உத்தமரின் வாழ்வு கூட அடிசறுக்கி தள்ளாடுகின்றது – அந்தச்
சிலநேரங்களில்
நெஞ்சத்தில் உறுதி கொண்டு உன்னை திடமாக்கிக்கொள் தோழா
நேர்மையை துணையாய்க் கொண்டு அநீதியைய் எதிர்கொள்
நேற்றைய துன்பங்கள் நேற்றோடு தொலைந்தன எனும் எண்ணம் கொள்.

சத்தி சக்திதாசன்

Series Navigation

author

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்

Similar Posts