வை.ஈ.மணி
தனித்து தினமும் புரியும் தவத்தில்
….. துதிக்க அனேக கரங்கள் குவித்து
அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன்
….. அறிந்து அளித்த வாழ்வின் நிலையை
நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை
….. நல்க வீண்டும் கருணை கோரி
எனக்கு விடுத்த பணியை என்றும்
….. இன்பம் பொங்கச் செய்யக் காணீர். (1)
சுற்றிலும் வாழும் மற்ற உயிர்கள்
….. சுற்றித் திரிந்து வாழ்வ தறிந்து
சற்றே கால்கள் இலாத சோகம்
….. திரண்டு பொருமி எழுந்த தெனினும்
மற்ற பிராணி கட்கு முற்றும்
….. மகிழ்ந்து சேவை செய்யும் வாய்ப்பு
பெற்ற பேற்றை எண்ணிப் பெரிதும்
….. பெருமை கொண்டு நிமிர்ந்து நின்றேன் (2)
தன்னலம் கருதி வளர்க்கும் தருவும்
….. தவிர, தோப்பும் செடிகள் யாவும்
தன்னுடல் போற்ற உணவுப் பொருட்கள்
….. சுகித்து வாழும் மனைக்கு மரமும்
தன்னுயிர் காக்க அசுத்த சுவாசம்
….. சுத்தப் படுத்தும் பணியும், என்றும்
இன்புற நீரும் நிழலும் பெறவே
….. என்ற உண்மை அறியார் யாவர் ? (3)
மலையிலும் காட்டிலும் காணும் மரங்கள்
….. மனிதன் வைத்து வளர்க்க வில்லை
அலைபோல் அசையும் புல்லின் அழகை
….. அனுபவித் தின்புறும் மனிதன் மேலும்
நிலவின் அழகை இலைகளின் ஊடே
….. நிரம்பப் பருகி மகிழ்வான் எனினும்
அலுக்கா துழைக்கும் மரத்தின் ஆவல்
….. அறிய என்றும் முயன்ற தில்லை (4)
பறவை பூச்சி காற்றும் புழுவும்
….. பரவ உதவும் மரத்தின் விதைகள்
அறிவு பெற்றும் மனிதன் அழிக்கும்
….. அரிய சேவை புரியும் மரங்கள்
இறைவன் அருளால் உணர்வு பெற்றும்
….. இரக்க மின்றி மனிதன் செய்யும்
சிறிதும் நன்றி யற்ற செய்கை
….. சொல்ல வாயும் பெற்ற தில்லை (5)
வை.ஈ.மணி
ntcmama@pathcom.com
- பைத்தியம்
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- காபூல் திராட்சை
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மரம்
- சிகரட்டில் புகை
- உலக சுகாதார தினம்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- ஆயிரம் தீவுகள்
- அகதி
- அறியும்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- கடத்தப்பட்ட நகரங்கள்
- என் இனிய சிநேகிதனே !
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- கடிதங்கள்
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- விடியும்! நாவல் – (10)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- குப்பைகள்
- ஏன் ?
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- பெயர் தெரியாத கவிதை! ?
- ஒரு விரல்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- இயற்கையே இன்பம்
- தேடுகிறேன்…
- நீ வருவாயென…
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- வைரமுத்துக்களின் வானம்
- சாமி- பெரிய சாமி