உழவன்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பொன்னி வளவன்


கரிய இருட்டின்
கொடுங்கோலாட்சியை
ஒழிக்க
கதிரவன்
புறப்படும் முன்பே
கலப்பையை
தோளில் சுமந்து சென்று…..

கரிய இருளிடம்
போராடி வெற்றி பெற்ற
இருமாப்பால்
கதிரவன்
பவனி வரும்
பகல் பொழுது முழுவதும்
நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து…..

கரிய இருளிடம்
இரண்டாம் கட்டப்போரில்
தோல்வியைத் தழுவிய
கதிரவன்
ஓடி மறைந்த பின்பு
வீடு திரும்பும்
உழைப்பாளி!

***
Ravichandran_Somu@yahoo.com

Series Navigation

author

பொன்னி வளவன்

பொன்னி வளவன்

Similar Posts