சி. ஜெயபாரதன், கனடா
சத்திரம், சாவடி எங்கள் இனம்!
எப்போதும்
வற்றாது
என் கிணறு!
வாசல்
திறந்தே கிடக்கும்
வரவேற்க!
வாயை
மூடிக் கொள்ள
கதவுகள் இல்லை!
வாளேந்தி நிற்கும் வன்முறைக்
காவலர் இல்லை,
கண்காணிக்க!
எதையும் போடலாம்! யாரும் போடலாம்!
காதல் கடிதம்!
காயிதம், கந்தைத் துணிகள்!
ஆபாச வார, மாத இதழ்கள்
வீசி எறிந்த
மாசிலாக் கதை, கவிதை, கட்டுரை!
உயர்ந்த மதிப்பெண்
பெற்று
வேலைக்கோ, மேற் படிப்புக்கோ
மேலினத்தார்
வீணாய்ப் போட்ட
விண்ணப்பத் தாள்கள்!
வேண்டியவற்றை
யாரும்
தோண்டிக் கொள்ளலாம்!
எடுக்க எடுக்க
அடுக்காய் வரும்,
அமுத சுரபி
எமது
புதையல் களஞ்சியம்!
திருமணப் பந்தியில்
தின்ன முடியாமல்
வயிறு முட்டி
வாழையில் பலவகை உணவை
வாரிக் கொட்டி
எனது
வயிற்றை நிரப்பும்
குபேரர் கூட்டம் ஒரு புறம்!
பட்டினியால்
பரிதபித்தெனை
நாடி வந்து
நாய்களுடன் போட்டி யிட்டு
பசியாறிக் கொள்ளும்
குசேலர் கூட்டம் மறு புறம்!
அதோ பார்!
அப்பன்! அரக்கன்! கல்நெஞ்சன்!
நொடிப் பொழுதில் தோண்டி
நள்ளிரவில்
எனது
அடி வயிற்றில் போட்டு மூடும்
பெண்சிசு!
மழலை
பேசும் பிஞ்சு!
பாசமலர் விழிகள்
மூடும் முன்பு
காத்திட முடியாமல் கனல் பற்றி
இதயம்
பொங்குது!
குழலினிய, யாழினியக் குரலில்
இங்கா ? இங்கா ? எனும்
சங்க நாதம்
எழுந்து
அனார்கலி போல்
மோனமாய்
அடங்கித்
தாஜ் மஹாலாய்
ஆகும்!
******************
jayabar@bmts.com
- கூடு விட்டு கூடு…
- கலையும் படைப்பு மனமும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- விசுவரூப தரிசனம்.
- ஒற்றுப்பிழை
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- நேற்று இல்லாத மாற்றம்….