பொன்னி வளவன்
பாருக்குள்ளே நல்ல நாடு
நம் பாரத நாடு என்றான் பாரதி
ஆனால்
பாருக்குள்ளே ஓர் நாடு
அது பாழ்பட்ட நம் பாரத நாடு
என்று பாடுமளவுக்கல்லவா
செய்துவிட்டார்கள் இந்த
பாழாய்ப்போன அரசியல்வாதிகள்!
நாட்டின் முன்னேற்றம்,
மக்கள் நலன் அப்படியென்றால்
விலை என்ன ? என்பவர்கள்தான்
இந்நாட்டின் அரசியல் தலைவர்கள்.
பதவி என்ற பேயின்
கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு அதன்
கட்டளைக்கு எப்படியெல்லாம்
பணிகிறார்கள் இந்த பரதேசிகள்.
சமூக விரோதிகள், ரவுடிகளின்
கூடாரமாகிப்போன
அரசியல் கட்சிகள்!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று பாடினான் பாரதி.
ஜாதிகள் பெயரில்
பிரிவினை ஏற்ப்படுத்தி
ஓட்டுகள் வாங்க நினைக்கும்
கும்பல் ஒருபுறம்,
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
என்று கூறினர் ஆன்றோர்
ஆனால்
மதங்களின் பெயரில்
பிரிவினை ஏற்ப்படுத்தி
ஓட்டு வாங்கத் துடிக்கும்
கும்பல் ஒருபுறம்,
ஆயுதம், கப்பல் பேர ஊழல்
என்று பட்டியல் போட்டு
கொள்ளையடித்த கும்பல்
ஆசையாய் நிற்கின்றனர்
அடுத்தகட்ட
அறுவடையை எதிர்பார்த்து!
ஊழல் என்ற சொல்லை
முதன் முதலில்
தமிழ்நாட்டில்
பிரபலமடையச் செய்த
தலைவர் அவர்.
இன்றோ
தனது கட்சியின் கொள்கைகளை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றார்
தன் வாரிசுகளுக்காக!
காமராசர், அண்ணா போன்ற
தன்னலமற்ற தலைவர்கள்
ஆட்சிபுரிந்து
பெருமை தேடித்தந்த
முதல்வர் பதவியில்
இன்று இருப்பவர் யார் ?
சினிமா என்னும் சாக்கடையில்
நீந்தி மகிழ்ந்த
ஒர் அகம்பாவம் பிடித்த மீன்!
அதற்கு முன்னால்
கைகட்டி, வாய் பொத்தி,
வணங்கி, வளைந்து
நிற்கும் வெட்கம்கெட்ட
உதிர்ந்த ரோமங்கள்!
அப்பெண்மணிக்கு உறுதுணையாக
ஓர் கொள்ளைக்கார கும்பல்.
வாணத்து தேவதயையே
நேரில் பார்த்துவிட்டதுபோல் மகிழும்
பாழாய்ப்போன
படிப்பறிவில்லா மக்கள்.
கண்ணிருந்தும் குருடர்களைப்போல்
வாழும் நம் மக்கள் இருக்கும்வரை
இந்த நயவங்சக அரசியல்வாதிகள்
ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
எம் மக்கள் எப்பொழுதுதான்
விழித்து எழப்போகிறார்களோ ?
***
Ravichandran_Somu@yahoo.com
- மனம் தளராதே!
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- இது உன் கவிதை
- சின்னச் சின்னதாய்…
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- என்னம்மா அவசரம் ?
- முதல் சந்திப்பு
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- ஆனாலும்…..
- காதல் காதல் தான்
- காற்றாடி
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- என் ஜீவன் போகும்…
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதங்கள்
- விடியும்! நாவல் – (6)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- ஒரு சொட்டு இரும்பு
- என் கவிதைக்குக் காயமடி!
- அரியும் சிவனும் ஒண்ணு
- கரடி பொம்மை
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- வெண் புறா
- அரசியல்
- சார்புநிலைக் கோட்பாடு
- தவறிய செயல்கள்
- பெண்ணே
- ஆசி
- போராடாதே … பிச்சையெடு
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வசிட்டர் வாக்கு.