சின்னச் சின்னதாய்…

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

மீ.வசந்த்,தாய்லாந்து



1) தவறுகள்

பூக்களைப் பறிக்காமல்
வேர்களைப் பிடுங்கி,
மரணத்தின் கணக்கெழுதும்
மனமில்லா கடவுள்கள்.


2) சுயநலத்தில் பொதுநலம்

குளத்தில்
கல்லெறியும் போது,
காயப்படுபவை
கரைகளும் தான்.


3) உறுத்தல்

முல்லைக்குத் தேரீந்த பாரி!! ?,
மயிலுக்குப் போர்வை தந்த பேகன்!! ?,
..!!.. ? ?..!!.. ? ?,
ம்..வஞ்சப்புகழ்ச்சியணி.


MSV001@MAERSKCREW.COM

Series Navigation

author

மீ.வசந்த்,தாய்லாந்து

மீ.வசந்த்,தாய்லாந்து

Similar Posts