மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை


எதிர்பார்த்து….

காதல் கொண்டதால்
காணாமல் போனது வாழ்க்கை
காணாமல் போனதால்
தோணாமல் போனது
உயிரின் மதிப்பு…

நடைப்பிணமாக நானிருக்க
நலமாக நீ…
இரு இரு
நீயாவது நிம்மதியாய் இரு…

ஆனால்
உன் இதயத்தின் ஓரத்தில்
ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தால்
என் நினைவு உன்னில்
எள்ளலவாவது இருக்கும்.

கொஞ்சி மகிழ்ந்த காலங்கள்
கண்ணில் தெரிகிறது….
கெஞ்சி விழுந்த நேரங்கள்
நெருப்பாய் சுடுகிறது.

உன்னை
மறப்பது என்பது
மனதார கூட முடியாது
என் மனம்
ஆற போவதும் கிடையாது…
இருப்பினும்
நலமோடு நீ வாழ்க…

கடந்த காலத்தை சுமந்து
நிகழ்காலத்தில் நெடுத்தெருவில்
வருங்காலத்தைப் பற்றி கனவு காணாமல்
சாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்து…


வறண்ட உள்ளம்…

காவிரிப் போல்
வறண்டுப் போய்
என் உள்ளம்…
(நீ)ீராக வராததனால்…

பாலைவனமாக மாற
எனக்கு சம்மதம்
நிலவாக நீ வந்தால்…


என்னவளே…

பார்த்த பார்வையிலே
பாதி உயிர் எடுத்து விட்டாய்

பூத்த புன்னகையில்
புதுக்கவிதையாக்கிவிடாய்…

அடியே உந்தன்
மடியில் விழுந்தேன்…
நொடியில் எந்தன்
பெயரை மறந்தேன்…

உன்

உதட்டின் ஓர
மச்சம் என்னை…
உசுப்பி விட்டு சிரிக்கிறதே…உன்னை

தலையை உசத்தி பார்த்தாலே
ஏனோ நெஞ்சம் பதைபதைகிறதே…

Series Navigation

author

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

Similar Posts