ஜெயந்தி சேது
ஏறாத கோவிலில்லை
வேண்டாத தெய்வமில்லை
கேட்பதெல்லாம்..
ஆசையாய் அம்மா என்றழைத்து
வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர்
புலனனைத்தும் அடக்கி
புலால் ஒதுக்கி
வெளியுலகம் மறந்து
வெற்றிடத்தில் மனம் செலுத்தி
உயிர்க்காலில் செய்யும் தவங்களிவை…
என்ன பயன் ?
அனுதாபப் பார்வைகளால் அடிவாங்கிச் செய்த
அடிப்பிரதட்சணங்கள் அனர்த்தமாய்போயிருக்கின்றன..
தவங்களும் வரங்களும்
தவறான கற்பனைகள் என்று
கண்விழித்து நிஜவுலகம் தரிசிக்க
கண்ணீரோடு கைகூப்பும் ஆதரவற்ற மழலைகள்
யாரோ பெற்று யாருமே பெற்றுக்கொள்ளாத வரங்கள்…
எல்லா கோவில்கள் அருகேயும்
ஓர் குழந்தைகள் இல்லம் வேண்டும்..
கடவுள்கள் கண்திறப்பதில்லை என்று
கண்மூடிச் சொல்லும் மனிதர்களுக்காகவேனும்…!!
***
jeyanthi.sethu@attws.com
- நாற்காலி
- சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
- உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்
- என்னைக் கவர்ந்த என் படைப்பு
- அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி
- 1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.
- அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa
- அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)
- திராவிடக்கனவுகள்
- மனமொழி
- பிடிவாதம் (கடிதங்கள்)
- சிசு வதைப் படலம்!
- பிறழ்வு
- சித்தும் சித்தமும்!
- தவம்
- சார்ஸ் பிசாசே!
- காலி இருக்கைகள்
- ஏழையின் தேசிய கீதம்
- இந்தியர்கள் – 5 கவிதைகள்
- தொலைந்து போனவன்
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘
- வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)
- குழாயடியில் ஆண்கள்
- பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :
- ஒரு மெளனத்தின் குரல்
- நீ ஒரு சரியான முட்டாள்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து
- பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)
- கடிதங்கள்
- அய்யா
- சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )
- மனம் உயர வழி!
- பன்னீர்த் துளிகள்
- குருடு, செவிடு, சனநாயகம்!
- அலைகள்
- நகர் வெண்பா இரண்டு
- உரை வெண்பா – வீதி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7
- நாளை நாடக அரங்கப்பட்டறை வழங்கும்
- சபலம்