கரு.திருவரசு
காலைப் பொழுதே நீசிரித்தாய் – ஒரு
களங்க மில்லாக் குழந்தையைப்போல்!
மாலைப் பொழுதே நீசிரித்தாய் – புது
மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்!
குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க – எழில்
குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க
இழந்தேன் மனத்தை இருபுறமும் – எனக்
கிருப்ப தென்னவோ ஓர்இதயம்!
முதுமைப் பருவம் அடைந்திருந்தால் – அந்த
முகையின் நகைக்கே மனமிழப்பேன்!
வதுவைப் பருவ வெறியிருந்தால் – அந்த
வாலைச் சிரிப்பில் விழுந்திருப்பேன்!
இரண்டும் கடந்த கவிதைமனம் – இது
எதிலும் அழகைத் தேடும்மனம்!
இரண்டு பொழுதும் அழகாக – எனை
இழுக்கும் நிலையான் எதுவாக ?
காலையின்றேல் மாலையில்லை – ஒரு
கன்னி இன்றேல் குழந்தையில்லை!
மாலை இன்றேல் காலையில்லை – ஒரு
மழலை இன்றேல் மங்கையில்லை!
பனியென மலரும் இளம்பொழுதே – சுவைப்
பதநீர் நிகரத்தே விழும்பொழுதே
இனியன இனியன இனியனவே – எங்கள்
இசைத்தமிழ் போல இனிப்பனவே!
thiruv@pc.jaring.my
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்