சி. ஜெயபாரதன், கனடா
மூடிக் கிடந்த
இரும்புக் கதவுகளை உடைத்தென்
இதயக் கோயிலின் உள்ளே
ஓடிப் போய்
தாழிட்டுக் கொண்டாய்!
தட்டித் தட்டிக் கை வலித்து
வாசலில் மணிக் கணக்காய்
தவங் கிடக்கிறேன்!
தாழ் திறவாய், எம்பாவாய்!
இடத்தைக் காலி செய்ய எழுதிய
மடல் அனைத்தும்
என்னை நோக்கியே
மீண்டன!
சாவியை எடுத்து
துளைக்குள் பார்த்தால்
கோபுரத் தூணாய்க்
கொங்கைகளைக் காட்டி
பாவை விளக்கேந்தி
பரதக் கலை நடம்
பயின்று கொண்டிருக்கிறாய்!
காவியச் சிலைகளைச் செதுக்கும் போது
எனக்கு ஓவியமாய் நின்று
உளிகளையும் அவ்வப்போது என்
கையில் கொடுத்தாய்!
கதவைத் தட்டுவது காதில்
விழவில்லையா ?
வெளியே வா, என்னுயிர்த் தோழீ!
அன்னை எழுந்து விட்டாள்!
ஆலய மணியை அடித்து நெஞ்சைப் பிளந்திடுவாள்!
விரைவில் வா!
இப்போது நான் தட்டுவது
என் இதயத்தை அல்ல!
உன் இதயத்தை!
தாழ் திறவாய் எம்பாவாய்!
*************
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்