வேதா
சின்ன உலகத்தில்
சீராட்டிப் பாராட்டி
சிவந்த கன்னத்தில்
திருஷ்டிப் பொட்டு வைத்து
பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட,
பாரடா….நாமெல்லாம் பத்தினிதான்!!
பார்ப்பவர் கண்களிலே
பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ?
அழகிய குழந்தையாய்
அழுது தீர்த்திருப்போம்,
‘அந்த ‘ அரக்கனின்ி அத்தனை வஞ்சத்தையும்!
ஓடி விளையாடும்
ஒவ்வொரு பொழுதிலும்,
ஓரக்கண் விடலைகள், எத்தனை எத்தனை ?
ஒவ்வொரு ‘பன்னாங்கல் ‘லுக்கும்
ஒய்யாரமாய் பயணிக்கும்,
ஒன்பது முறை ‘சில ‘ பார்வை,
கீழிருந்து மேல் வரைக்கும்!
தோழர்கள் தொடவேண்டி
‘நொண்டி ‘ ஆடியே
புரியாத வயதில், அறியாத நிலையில்,
விடலைக் கற்பழிப்பு!
மனம் விரித்து
வானம் தொடும் ஆசையில்
வயதுக்கு வந்துவிட்டால்….,
‘பெரிசாயிட்ட…. ‘ – ஒற்றை வார்த்தையில் எச்சரிக்கை மணி!
‘என்னிக்கும் எங்க பொண்ணு ‘
– எங்கெங்கோ தொட்டுப் பார்க்க
இதுவும் ஒரு சாக்காடு!
குளித்துத் துவைக்க
கும்மிருட்டில்தான் முடியும்!
சன்னலே கண்களாய்,
அளவெடுக்கும் காண்டாமிருகங்கள்!
பேருந்து நிறுத்தத்தோடு
மானத்தையும் நிறுத்திவிட,
‘ஏறும்போது எந்தக் கால் தெரியுமோ ? ‘
அச்சம்…,மடம்…, நாணம்…(! ?)
அத்தனை நெரிசலிலும்
அவசரமாய் ஒருதடவை
உரசிவிட்டுப் போகவேண்டி,
கூடவே ஏறும் உடன்பிறவா ________கள்!
‘ஏஸி ‘ அறையில் எத்தனை பேசினாலும்
முகத்தைப் பார்க்காமல்,
முடிமுதல் அடிவரைக்கும்
மேய்ந்துவிடும் எருமைகள்!
‘சிக்கவே இல்லையே! ‘
சீறிப் பாயப் பதுங்கியிருக்கும்
சிறுத்தைக் கூட்டங்கள்…
போர்த்திய புடவைக்குள்
புதையலைத் தேடும் பொறுக்கிகள்…
வலைவிரித்துக் காத்திருக்கும்
வல்லூறுகள்….
இத்தனையும் நிறைந்த இவ்வுலகில்,
பெண்ணைப் பெண்ணாய் மதித்து,
அவள் உயிரை, உணர்வை,
கண்கள் வழி பார்த்துக் கதையெழுதும்
கவியொருவன் கிடைத்துவிட்டால்…
சொல்லி அனுப்புங்கள்,
சுதந்திரமாய்,
சூட்டிடுவோம் அவன் பெயரை…
‘ஆண்மகன் ‘ என்று!!
piraati@hotmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்