ஆ. மணவழகன்
அலாரம் வைத்தோ…
அடுத்தவர் தட்டியோ..
ஐந்து மணிக்கே எழவேண்டும்!
அழ்ந்த உறக்கமோ…
அழகான கனவோ…
தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி
சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்!
மேகம் தூது என்றால் – அது
மேலைக்காற்றின் வசம் தானே!
மின் அஞ்சல் தூது என்றால்…
மின் மினியாய் ஒளித்திடுமே!
ஆறப்போட்ட கவிதையை ஒரு முறை
அரங்கேற்றம் செய்யலாமா ?
பார்ிபோற்றும் தமிழால்ி – புது
பாமாலை தொடுக்கலாமா ?
பக்கத்தில் வரவழைத்து
பரிசுகள் கொடுக்கலாமா ?
பார்வைக்கு விருந்தாக – பல
புதுமைகள் செய்யலாமா ?
நிலைமொழி ஈற்றிக்கும்
வருமொழி முதலுக்கும்
இலக்கணம் உண்டு! – இணைப்பில் பல
இலக்கியம் உண்டு!
படித்தும் நான் அறியாததை,
பழக்கத்தில் நீ அறிந்தாய்!
வாழ்த்தோடு கூட – அவள்
வார்ப்பையும் சொல்லலாமா ?
எதிர்ப்பார்த்தே வைப்பாயோ!
எதேச்சையாய் வைப்பாயோ! – உன்
ஒவ்வொரு அடிக்குள்ளும்,
ஒளிந்திருக்கும் கதை உண்டு!
ஒன்றிரண்டை உரைக்கலாமா ?
வியக்கவைக்கும் கற்பனைகள்
விண்மீனைக் கோர்த்தெடுக்கும் கனவலைகள்!
வினையில்லா வீணையிலும்,
விதவிதமாய் நாதங்கள்!
ஏதேதோ அவசரங்கள்
என்னையும் இறுக்கிப் பிடிக்க…
உனக்கான திருநாளில் – நான்
உரைக்காமல் போனேனே!
பூவுக்குள் மணமாக – என்னில்
புதைத்து வைத்து மறந்தேனே!
வாழ்த்திற்குப் பார்த்திருந்து…
வருமென்று காத்திருந்து…
‘நீயுமா மறந்தாய் ‘
நிதாமனாய் நீ கேட்க…
நித்தமும் நின்று போக – நான்
நிமிடத்தில் இறந்தேனே!
**
a_manavazhahan@hotmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்