தமிழ்மணவாளன்
எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு
நாடகம் பார்க்கச் செல்லும் போது
இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய்.
அழுது கொஞ்ச நேரத்தில்
அப்படியே உறங்கிப் போவேன்.
அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச
‘நல்ல பையன் சொன்னதைக் கேட்பான் ‘
எனச் சொல்வாய் பெருமையாய்.
நாடகம் பார்த்ததிலும் அதிக திருப்தியோடு
தீர்ந்து போகுமென் நாடக ஆசை.
கோபத்தில் அப்பா அடித்துத் துரத்த,
அவர் கடைக்கு போன சமயம்
கொல்லைப் பக்கம் அழைத்து
சாப்பிடச் செய்வாய்.
வார விடுமுறையில் வந்து செல்கையில்
அப்பா கொடுக்கும் அதேயளவு
நீயும் கொடுப்பாய்
‘போதும் போதும் ‘ என்பேன் நான்.
அந்தப் பணம் கொடுப்பதற்காய்
எத்தனைச் சிக்கனமாய்
இருந்தாய் நீ.
ஆயிரமாயிரமாய் சம்பாத்ித்து
அவசியமானவையெல்லாம்
வாங்க செலவு செய்ய முடிகிறது
என்னால் இப்போது.
ஆயினும்
விரல் குவித்து அடுக்கிய
சில்லரைகளைத்
தருவாயே
அந்த இன்பம் எப்போதுமே
சற்றுக் கூடுதல் தான் அம்மா.
tamilmanavalan@yahoo.co.in
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்