புதியமாதவி, மும்பை 42.
ஆகாயக்கோட்டை
————–
ஆகாயமே-
உன் கதவுகளை
எனக்காக
ஏன் திறந்துவிட்டாய் ?
உன் வாசலில்
ஆயிரம் நிலவுகள்
ஆனாலும்-
பூமியின் நிலவுக்கு மட்டும்
ஏன் பொட்டு வைத்தாய் ?
உன் பிரபஞ்சத்தில்
கோடி சூரியன்கள்
ஆனாலும்-
உன் மனத்தேரில்
மண்ணின் சூரியனுக்கு
ஏன் மாலையிட்டாய் ?
ஆகாயமே..
ஓடும் மேகங்கள்
உறங்கட்டும் என்றா
என் சின்ன இலைகளில்
கூடு கட்டினாய் ?
இன்று-
மலைமுகடாய்
நான் தொட நினைக்கையில்
எட்டாத கனவோடு
எங்கே ஓடினாய் ?
பருவ மழையாய்
பிறந்த போதெல்லாம்
உறவு வயல்களுக்கே
உயிர்ப் பாய்ச்சினாய்
இன்று-
உனக்காக
பதியம் போட்ட
முல்லைப் பந்தலை
பார்க்காமலேயே
ஏன் பாலையாக்கினாய் ?
உன்னை-
தொட்டுவிடுவேன் என்றா
என் இமைகளில்
தூங்க மறுத்தாய் ?
என் இதழ்கள்
பட்டுவிடும் என்றா
உன் பாடலை
எழுதாமல் முடித்தாய் ?
**
காற்றே..வீசாதே..!!
——————
காற்றே..
கதவுகளில்லாத என் தோட்டத்து
காவலுக்கு வந்தக் காற்றே..!
என் பூக்களைத்
தொட்டுவிடாதே..!
சூரியதேவனை
மணப்பதற்காக
சூடிக்கொடுத்த பூமாலை
உன் கைப்பட்டால்
பட்டுவிடும்!
வாசனைத் தொட்டால்
வாடிவிடும்!
காற்றே.. அசையாதே!
பூவின் அந்தரங்கம்
உடைந்துவிடும்
காற்றே..வீசாதே!
பூவின் விதிவிளக்கு
அணைந்துவிடும்.
>>>>>>>>>>>>>>புதியமாதவி,
மும்பை 400 042.
puthiyamaadhavi@hotmail.com
- எங்கே அவள்
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- கவிதை பற்றி
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- சென்னைத்தமிழில் கணினி
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- உயிரின் சொற்கள்
- காலம்
- இனியொரு வசந்தம்!!
- அன்னை
- இயந்திரப் பயணங்கள்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- பேராசை
- தூண்டில்காரர்கள்
- மாப்பிள்ளைத் தோழன்
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- 5140
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- அம்மாச்சி
- ஓ போடு……………
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- குழியும் பறித்ததாம்!
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- கடிதங்கள்
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- அன்னையர் தின வாழ்த்து
- சாப்பாடு
- மறுபிறவி எடுத்தால்
- இரண்டு கவிதைகள்
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- தாயின் தனிச்சிறப்பு
- வரங்கள் வீணாவதில்லை…