மழை

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

ஸ்ரீராம்…


நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ?
முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று ….

வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன் தன் உடலை உலுக்கிற்று !!!!
உலுக்கலினால் இடியுடன் பல துளிகள் விழந்தன…..

வானம் இசைத்த இடி மழை துளிக்கு பின்னிசையாக அமைந்திட்டது…
இசைக்கு ஏற்றவாறு மழை துளிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாட்டியம் புரிந்தன….

இந்த பின்னிசையையும் நடனத்தையும் பார்த்து நிலம் தன் பரந்த மேனியை வளைந்திட்டது…
இதை கவனித்த வானம் தன் மின்னல் என்னும் புகைக்கருவியால் அழகிய புகைப்படம் எடுத்தது…..

மக்கள் வாழ்வை செழிப்புடன் தழைக்க வைப்பதால் தான் அதன் பெயர் மழையோ !!!!

அன்புடன், ஸ்ரீராம்…
slib@rediffmail.com

Series Navigation

author

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

Similar Posts