கோமதி நடராஜன்
ஹே ராம்!
ஜனவரி முப்பதாம் நாள்,
ஜனங்கள் கேட்டனர், ‘ஹே ராம்! ‘,
அதை,அண்ணல் மட்டும்
சொல்லவில்லை.
தப்பான இதயத்தைத்
துளைத்தோமே,
என்றுணர்ந்தத்
தோட்டாக்களும்,
சேர்ந்தே அலறின,
‘ஹே ராம் ‘ஹே ராம்!ஹே ராம். ‘
——————————–
களிறின் காலில் கயிறு.
——————–
பாரதி, ‘காலனே வாடா!உன்னைக்,
காலால் மிதிக்கிறேன் ‘என்றான்.
காலனோ,
கவியின் காலுக்கு,
எட்டாத உயரத்தில்,
களிறின் காலில்
மறைந்து கொண்டான்.
கச்சிதமாய்க் காரியத்தை
முடித்துக் கொண்டான்.
இன்னொரு பிறவி.
—————
இறைவா!
எனக்கு, இன்னொரு பிறவி,
உண்டென்றால்,
அடுத்தவர், இன்னல் தீர்க்கும்,
அன்னை தெரசாவாக,
என்னைப் படைப்பாயெனில்
ஏற்றுக் கொள்கிறேன்.
மாறாக, இப்பிறவி போல்,
‘நான், என் வீடு,
என் குடும்பம் ‘என்று
அற்பப் புழுவாகத்தான்,
அடுத்த பிறவியிலும்,நான்
நெளிவேன் என்றால்,
ஏர்க்கால் பட்டு,
நசுங்கி மடியும்
மண்புழுவாகவே,
என்னைப்
படைத்து விடு.
சொற்ப நிமிடம் நெளிந்தாலும்
மண்ணுக்கு உரமூட்டி வாழ்ந்தேன் என்ற,
புண்ணியமாவது மிஞ்சும்.
**
ngomathi@rediff.com
- தலைப்புகளற்ற மூன்று கவிதைகள்
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)
- சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)
- மனிதனும் இருப்பும் – மறுபிறப்புப் பற்றி – சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்
- சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)
- கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)
- ரோட்டி கனாய்
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா [Kalpana Chawla Ph.D.] (1962-2003)
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)
- அப்பாஸின் நான்கு கவிதைகள்
- தொட்டி(ல்) குழந்தை
- காகிதங்களாய் நாம்
- நஞ்சுண்டன் கவிதைகள்
- இந்தியாவின் விடிவெள்ளி
- எங்கிருந்து வருகிறது ?
- ஒரு தந்தையின் கடன்
- பிப்ரவரி 1, 2003
- எட்டிப் பாரடி..
- முகவரி இல்லாத கடிதம்
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- கடிதங்கள்
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- குறிப்பு
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)
- வாழ்வுகள் வாழும்
- அறிவியல் துளிகள்-13
- என்னவள்
- நல்ல வார்த்தைக் கிளி
- தேடித் தொலைந்தது
- வா கண்ணா
- மூன்று கவிதைகள்
- சில குறும்பாக்கள்
- சொல்ல மறந்த கவிதை
- வாசித்து முடித்த குழு – உரை வெண்பா
- நே வா.