மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

கோமதி நடராஜன்


ஹே ராம்!

ஜனவரி முப்பதாம் நாள்,
ஜனங்கள் கேட்டனர், ‘ஹே ராம்! ‘,
அதை,அண்ணல் மட்டும்
சொல்லவில்லை.
தப்பான இதயத்தைத்
துளைத்தோமே,
என்றுணர்ந்தத்
தோட்டாக்களும்,
சேர்ந்தே அலறின,
‘ஹே ராம் ‘ஹே ராம்!ஹே ராம். ‘
——————————–

களிறின் காலில் கயிறு.

——————–
பாரதி, ‘காலனே வாடா!உன்னைக்,
காலால் மிதிக்கிறேன் ‘என்றான்.
காலனோ,
கவியின் காலுக்கு,
எட்டாத உயரத்தில்,
களிறின் காலில்
மறைந்து கொண்டான்.
கச்சிதமாய்க் காரியத்தை
முடித்துக் கொண்டான்.

இன்னொரு பிறவி.

—————
இறைவா!
எனக்கு, இன்னொரு பிறவி,
உண்டென்றால்,
அடுத்தவர், இன்னல் தீர்க்கும்,
அன்னை தெரசாவாக,
என்னைப் படைப்பாயெனில்
ஏற்றுக் கொள்கிறேன்.
மாறாக, இப்பிறவி போல்,
‘நான், என் வீடு,
என் குடும்பம் ‘என்று
அற்பப் புழுவாகத்தான்,
அடுத்த பிறவியிலும்,நான்
நெளிவேன் என்றால்,
ஏர்க்கால் பட்டு,
நசுங்கி மடியும்
மண்புழுவாகவே,
என்னைப்
படைத்து விடு.
சொற்ப நிமிடம் நெளிந்தாலும்
மண்ணுக்கு உரமூட்டி வாழ்ந்தேன் என்ற,
புண்ணியமாவது மிஞ்சும்.
**
ngomathi@rediff.com

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts