கடல்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பிரியா ஆர்.சி.


சரித்திரங்களை மூழ்கிச் சாகடித்த வருத்தமா ?

உன் கரையில் தொடங்கி கல்லரையில்
முடிந்த காதலுக்கு கண்ணீர் அஞ்சலியா ?
பல்லாயிரம் ஜீவன்களின் நிழலான உனக்கு
நிழல் இல்லையென்ற ஏக்கமா ?
எங்கள் கணக்கில்லா கலவரங்களில் உன்
நிறம் சிவப்பாகுமோ என்ற நடுக்கமா ?
மாதம் ஒருமுறைகூட முழுநிலவை
எட்டிப் பிடிக்க முடியாத இயலாமையா ?
மக்களைக் காக்கும் மழைநீர் கொடுத்தும்
நீ மட்டும் என்றும் கரிக்கும் சாபமா ?

எதற்கு இந்த ஓயாத அலை அழுகை ?

rcpriya@yahoo.com

Series Navigation

author

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

Similar Posts