வசீகர் நாகராஜன்
அலைபாயா அவசரமின்றி
அலைக்கழிக்கா பரபரப்பின்றி
வேலையன்றி ஓர் வேளை
கணினி முன் கழித்ததுண்டா ?
நிதம் நிரம்பி வழியும் மின்கடிதங்கள் மூட
காவிரி நீர் வேண்டும் தஞ்சைப் பயிராயிட ,
அரைமணிக்கொரு முறை தேநீர் அருந்திட,
அசையாமல் அமைதி அணிந்திடும் கடிகாரம்
யாஹூவும் கூகுலும் வலைவிரித்து
அகப்பட்ட வாசல்கள் அனைத்தும் நுழைந்து
குமுதமும் விகடனும் மறுபடி படித்துக் களைக்கையில்
மந்தமாய் மயங்கி வந்திடும் மதிய உணவுவேளை
உணவின் கனம் உணர்த்திடும் களைப்பு
செயலற்றுப் போனதொரு செயல்நிலை
உணர்வுகள் உறங்கிட விழித்திருக்கும் விழிகள்
வீணடித்த கணங்கள் மனதில் வீற்றிடும் கனம்
சக நண்பர் சிரிப்பொலியில் கரைந்திடும் அயர்வு
அலுவலின் சுமையில் மறந்திருந்த மடல்களுக்கு
நலம் நாடி நட்பு புதுப்பித்து மனது லேசாகையில்
கண்சிமிட்டி சிரித்திடும் மனதின் ஓரம் ஓர் கவிதை .. ..
vasikar@சுahoo.com
VNagarajan@us.imshealth.com
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?