பவளமணி பிரகாசம்
தனிமை என்பதோர் கொடுமையோ ?
தனிமை என்றென்றும் இனிமையோ ?
சுமையாய் காலம் தோன்றுமோ ?
சுகமாய் கற்பனை ஈர்க்குமோ ?
வெஞ்சிறையாய் என்னை பொசுக்கிடுமோ ?
வெட்டவெளியில் சிறகை விரிப்பேனோ ?
கூடிப் பேச யாருமில்லா வெறுமையோ ?
குறை கூற ஆளில்லா நிம்மதியோ ?
இலக்கின்றி மணித்துளியை நகர்த்தவோ ?
இடரின்றி விரும்பியதை நாடவோ ?
அலுப்பும் சலிப்புமாய் களைப்புறவோ ?
அலுவல் ஏதுமின்றி இளைப்பாறவோ ?
எட்டத்து உறவை எண்ணி ஏங்கவோ ?
எதுவும் எட்டுகிற நேரத்தை வியக்கவோ ?
சூன்யமானதே உலகமென்றிடவோ ?
சுட்சுமமாய் விளங்கிட இத்தனை ஞானமோ ?
தத்தளித்து மனம் அமைதி இழக்குமோ ?
தத்துவ விவாதத்திலே களிக்குமோ ?
நத்தையாய் ஓட்டுக்குள் ஒடுங்கவோ ?
பட்டாம்பூச்சியாய் பறந்து திரியவோ ?
தொல்லையாய் சுவாசிப்பதே ஆகுமோ ?
எல்லையில்லா சுதந்திரம் கிட்டுமோ ?
வட்டத்துக்குள் வருந்திடவோ ?
கட்டுக்கள் களைந்தனவோ ?
முள்ளாய் குத்தும் வலியிதுவோ ?
கொள்ளை இன்பம் கொடுப்பதுவோ ?
வரும் இறுதி நாளை எண்ணி மருளவோ ?
வந்து போன நாளை நினைவில் ருசிக்கவோ ?
நிந்தித்து பொழுதை தள்ளவோ ?
சிந்தித்து மகிழ்வை அள்ளவோ ?
இதுவோ ?அதுவோ ?எதுவோ ?
சாந்தி ஒன்றேதான் இலக்கோ ?
***
pavalamani_pragasam@yahoo.com
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?