வசீகர் நாகராஜன்
என் சுவையறிந்து,
அளவாய்க் கலக்கின
தெருமுனைக்கடைத் தேநீர் !
தினசரி பேருந்து
ஜன்னலேரோப் பெண்ணின்
சிநேகப் புன்னகை !
யாரும் விதைக்காமல்
தோட்டத்தில் துளிர்விட்ட
பாகற்காயின் இனிமை !
அந்நிய தேசத்தில்
எதிர்பாராது செவிப்படும்
அவரவர் தாய்மொழி !
மழையும்,வெயிலும்
சேர்ந்தடித்த இளமாலையின்
மயக்கும் வானவில் !
தன் உணர்வே வார்த்தையாகையில்
பூவாய்த்
தைத்திடும் கவிதை !
மனதின் தாழ் களைந்து
நானே நானாய்
மாறியழ இரு தோள் !
உணரும் சில கணம்,
உயிர் மலரும் மறுபடியும் !
vasikar@yahoo.com
- அனுபவம்
- காதல்..
- நன்றி
- அறிவியல் துளிகள்-9
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)
- மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)
- தப்பும் வழி
- மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்
- காத்திருக்கிறேன் அம்மாவிற்காக
- மழை
- ஓடிவா மகளே!
- ஒரு நாள் = 40 மணி நேரம்.
- கடல் அரசனின் கட்டளை!
- பாம்பு பற்றிய பயங்கள்.
- திரைக்கடலோடியும் –
- கடிதங்கள்
- தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்
- ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்
- கழிப்பறைகளும் விழிப்புணர்வும்
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார
- என்னென்ன செய்யலாம் ?
- பூவின் முகவரி
- எல்லைகளைப் போடாதீர்!
- பறவையும் பெரு முட்டையும்!
- உயிர்ப்பு