அமைதி

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

புஷ்பா கிறிஸ்ரி


எங்கிருந்தோ ஒரு

சில்வண்டு

தனிமையில்

பறந்து வந்தது

காட்டின் மத்தியில்

அமைதியான சூழலில்

அந்த மயானம்

தனித்து கிடந்தது

பாதை தவறிய

வண்டும்

மயானததை

அடைந்த போது

தனிமையும்

பயமும் தொற்றிக் கொள்ள

வண்டு அழுதது.

நான் எங்கோ

செல்ல வந்தேன்

தொலைந்து போனேன்

என்ற வண்டின் கதை கேட்டு

காடு கண்ணீர் விட்டது

‘அழாதே!

நீ போக வேண்டியவிடம்

எனக்கும் தெரியாது

நானும் நாட்டிலிருந்து

வெகு தூரம் தொலைந்து

வந்து தானிங்கு

தஞ்சமானேன்

அழுது பயனென்ன ?

நீ என் நிழலில் தங்கலாம்

என் நிழலில் நீயும் அமைதி காண் ‘

என்றது காடு

வண்டு வேறு வழியின்றி

அமைதியாக …

அடக்கமாக..

வாழத்தொடங்கியது..

அந்த மயானத்துக்

காட்டில்….

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

author

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி

Similar Posts