மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

சேவியர், கோபால்


10

இணையின் நிலை அறியாது
காத்திருக்கும்
காலம் கொடியதா ?
காத்திருக்கும் காலத்தில்
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சினில் தைக்கும்
காதல் கொடியதா ?

ப்ரியா காத்திருந்தாள்.
கண்களைத்
தொலைக்காட்சியிலும்
காதுகளைத்
தொலைபேசியிலும்
நினைவுகளை
பாலாவிலும்
தொலைத்துக்
காதலால்
காதலனுக்காய்
காதலுடன்
காத்திருந்தாள்.
வீட்டினுள் இருந்தும்
அன்னியமாய் உணர்ந்தாள்.

தீச்சுவடுகள் சுமந்த
திரையரங்கு வாசல்
தொலைக்காட்சி வழியே
அச்சுறுத்தியது.

காதலர் தினமென்று
மொத்தமாய்ச் செலவு
செய்ய
சிறுகச் சேமித்து,
பேரலையில் அழிந்த
மணல் கிறுக்கல்களாய்ப் போன
கனவுகள் எத்தனையோ ?

சிணுங்கிய தொலைபேசி
எண்ணங்கள் கலைத்தது!
ப்ரியா நலமா ? என
பாலாவின் குரல் ஒலிக்க
ப்ரியாவின் இதயம்
விட்டம் பாய்ந்து மீண்டது!
வார்த்தைகள் மரித்துப் போன
மெளன வினாடிகளில்
அவன் இதயம் துடிப்பதும்
செவிகளில் ஒலித்தது.

தன் பெயர் இதுவரை
இத்தனை இனிமையாய்
ஒலித்தாய் நினைவில்லை.

பாலா நலமா ?
கண்ணீர் வார்த்தைகள்
பாலாவை நனைத்தது.
மகிழ்ச்சியின் மிகுதியால்
நெஞ்சம் நிறைய
வார்த்தைகள் இருந்தும்
ஊமையானாள்.

கலவரத்தில் மீண்ட கதை,
மீண்டவள் மீண்டும்
அவன் குரல் கேட்கும்வரை
இருட்டு உலகில்
இருந்த கதை என
கவலைகள் அனைத்தும்
பரிமாறிக் கொண்டாள்.

ப்ரியமானவளே
நானும் உனை இழந்தேனோ
என ஒரு கணம்
இறந்தேன்!
நீ நலமாய்
இருப்பது அறிந்ததும்தான்,
மீண்டும் பிறந்தேன்.
கண்மணி உன்னை
மீண்டும்
கண்கள் வழியே
இதயத்தில் நிரப்ப வேண்டும்
நாளை நம் இடத்தில்
காத்திருப்பேன் வா என
பாலா உரை முடித்தான்.

தொலைபேசி
வைத்த பின்னும்
செவிகளில் நாதம்.
பூவுலகம் முழுவதும்
புதியதாய்த் தெரிந்தது.
மழைச்சாரல் தெறித்த
மனக்காதல் செடியில்
புதிதாய் ஒரு மலர்
பூத்திருந்தது.
ப்ரியா,
காதல் உண்டு,
காதல் உடுத்தி,
காதலில் விழுந்து,
கண்கள் மூடினாள்.

கோபால்.

****

11

புதிதாய் முளைத்த
கதிரவன் போல
பிரகாசமாய் காத்திருந்தான்
காலையிலேயே பாலா.

மரணக் கட்டிலில்
மூச்சுக்காற்றோடு முரண்டுபிடித்து
முனகிக் கிடந்த மனசுக்குள்
ஓர்
ஆக்சிஜன் அருவி
சட்டென்று உற்பத்தியானால்
எப்படி இருக்கும் ?

அப்படித் தான் இருந்தது
நேற்றைய
அனுபவங்கள்.

நகம் வெட்டிக் கொள்ளும்
அவசரத்தில்
இதுவரை
விரல் வெட்டிக் கொண்டிருந்தது
இப்போது தான்
பாலாவிற்கு விளங்குகிறது.

நேற்றைய ஒரு நாளில்
நகரம்
நரகத்தை அல்லவா
நடித்துக் காட்டியது ?

பருந்துகளாய்
பேருந்துகள்
பறந்து கொண்டிருந்த சாலைகள்,
வல்லுெறுகள் வட்டமிடும்
வனமாய் அல்லவா
இறந்து கிடந்தது ?

எத்தனை சுவாசங்கள்
நேற்றோடு
நுரையீரல் பயணத்தை
நிறுத்திக் கொண்டனவோ ?

எத்தனை
இரத்தக் குழாய்கள்
நேற்று
இறுதி ஊர்வலம் நடத்தினவோ ?

எத்தனை பூக்கள்
மலர் வளையங்களுக்குள்
மடிந்து கிடந்தனவோ ?

விஷம வேடனின் அம்புகள்
எத்தனை இணைகளின்
இணைப்புகளை உடைத்தனவோ ?
அங்கே
எத்தனை சாபங்கள்
ஆழ்மனதிலிருந்து அவிழ்ந்தனவோ ?

யோசிக்க யோசிக்க
பாலாவுக்குள் ஓர்
பரபரப்பு அரவம் பாய்ந்தோடியது.

பின்னாலிருந்து
பாலாவின் கண்ணைப் பொத்தி
சிந்தனைகளைக்
கலைத்தாள் பிரியா.

பாலாவுக்குள் சட்டென்று
பாலாபிஷேகம்.

பிரியா…

பாலாவின் கண்களும்
வார்த்தைகளும்
ஈரமாய் வழிந்தன.

ஆயிரம் முறை சொல்லியிருப்பான்
இப்போது
புதிதாய் இருந்தது
அவள் பெயர்.

பாலா…

பிரியாவுக்குள்ளும்
அதே நெகிழ்வு.

பாலையில் பாதை தவறி
பயணித்து நடந்தவன்
அருவியைக் கண்டதும்
அடையும்
ஆனந்தம் இருவரிடமும்.

யோசிக்கவே முடியவில்லை பாலா,
நீயோ நானோ…
அதற்குமேல் பிரியாவிடமிருந்து
வார்த்தைகள் வரவில்லை.
கண்ணீர் தான்
கரையுடைத்து கன்னம்தொட்டது.

அந்தக் கண்ணீருக்குள்
ஓர்
உப்பளத்தின் அடர்த்தி
தப்பாமல் இருந்திருக்கும்.

யோசிக்க வேண்டாம் பிரியா,
உன் இழப்போ
என் இழப்போ
தாங்க இயலா பாரம் என்பதை
நேற்றைய காற்று
சொல்லித் தந்தது இல்லையா ?

நமக்கிருப்பதெல்லாம்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் தானே
அதில்
அக்கினியை எப்படி
அடைகாக்க முடியும் ?

வெயிலின் முந்தானை
மூடாதவர்க்கெல்லாம்
இந்த
நிழலின் துண்டு
வியர்வை துடைக்காது இல்லையா ?

விரல்களை பரிசளித்த
சுதந்திர வீரரின் பரம்பரை நாம்.
இன்னும்
நகத்தின் அழுக்கெடுக்கவும்
பழகிக்கொள்ளவில்லை பார்த்தாயா ?

கிளிகளை
தானியங்களில்லா தேசத்திலல்லவே
திறந்து விட்டது !
ஆறுகள் கூட
புனிதமாய் ஊறும் பூமியிலா
வன்முறைமையும்
கூடவே உற்பத்தியாவது ?

திஸ்ரீயுச்ஸ் ேலுறுரஷ ப்சூஸ்ரீ
ண்ஸ்ரீயுச்ல்ஷ ேலுறுரடிமிஸ்ரீமடுபூ
ண்புமுசூரூ டாமசூம்டாபூ
ண்முபஸ்நுயிச்ஸ்ரீ ரூம்றுநுஷ.

திஸ்ரீடுயு ண்ஸ்ரீயுச்ஸ்
ம்ச்டுபூன்பூ டாமசூடாபூ
திஸ்ரீ ணநுஷ
ணயச்ன்பூச்லுறுநு டாம்னுரீஷ
டாமசூநுனீரீஷ ேயுச்டாமீவூஷ
திஸ்ரீடுயுலீஷ ண்ஸ்ரீடுயுலீஷ
ேடுபுன்ரூறு
நுசூபூஸ் மினுபுச்ஸ்
ணநுஷ லடுபூறுநுமூசூஷ ம்சூ!

ஆரம்பிச்சுட்டியா ?
புலம்பலை நிறுத்து பாலா ?
ஒப்பாரிகளை எல்லாம்
ஒப்பனை வாதிகளுக்கு இருக்கட்டும்.
இந்த நாளை நாம்
மறக்கவே கூடாது.
அதுக்காக ஏதேனும் செய்யலாம்
சொல்லேன்.

ம்..ம்…
பூமித் தாயின் முகத்துல
குருதி மழை கொட்டிய நாளை
நாம
இரத்த தானம் செய்தே
நினைவு கூரலாமா ?
பாலா கேட்டான்.

சரிடா…
பிரியா காதலுடன் சொன்னாள்.

ஐ லவ் யூ ெ டா
பாலாவும்
காதலை நிறைத்து
ஊற்றிய வார்த்தையை நீட்டினான்.

இப்போ தான்
புதுசா காதலிக்கிறது போல
இருக்கு,
பாலா பிரியாவின்
விரல் பற்றிச் சொன்னான்.

அப்போ
இதுவரை நீ காதலிக்கவே
இல்லை இல்லையா ?
பொய்க் கோபத்தோடு
விரல் விலக்கினாள் பிரியா ?

அப்படியில்லே…
கொஞ்சம் அதிகமா
காதலிக்கிறேன்…
பாலா விளக்கினான்.

அப்போ
நேற்றுவரை கொஞ்சமா தான்
காதலிச்சியா ?
பொய்க்கோபத்தை அதிகப் படுத்தி
விலகி அமர்ந்தாள் பிரியா ?

காலங்காலமாய்
கூடவே இருந்தாலும்
அலுக்காத
ஊடல் காட்சி ஒன்று
உற்சாகமாய் அங்கே
உச்சத்தில் நடந்தது.

அவர்களுக்கிடையே இருந்த
பசூம்பல் சிந்தனைகளை எல்லாம்
நேற்றைய
சுழல்காற்று
சுருட்டி எடுத்துச் சென்று விட்டது.

அதுவரை,
சின்னச் சின்னச் சிலுவைகளை
அடுத்தவர் தோள்களில்
திணித்துக் கொண்டிருந்த
பறவைகள் இரண்டு,
இப்போது அடுத்தவர்
சிலுவையை ஏந்திக் கொள்ள
சிறகுகளை தயார் செய்கின்றன.

வாழ்க்கை என்பது
விட்டுக் கொடுத்தலில்தான்
வளரத் துவங்கும்,
அது கால்களை இழுக்கும்
கபடி விளையாட்டல்ல
தீபம் மாற்றித் தொடரும்
தொடர் ஓட்டம்
என்பதை
காதல் பறவைகள் கண்டு கொண்டன.

சேவியர்

***
நிறைவுற்றது

gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.com

***

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts