கோபால்
வாகனம் விரட்டிய நாயகன்
திரையரங்கு அருகில்
நெருங்கினான் இல்லை!
தீவிரவாத நச்சுப் புகைக்குத்
தீண்டாமை ஏது ?
நகர வாழ்க்கையின்
அமைதியை அது
மூச்சுத் திணறலில்
மூழ்கடித்திருந்தது.
சற்று முன்
காதல் பறவைகளின்
கானம் நிறைத்த இடம்
புயலில் கலைந்து போன
பறவைக் கூடு போலானது.
அமைதி காக்கக்
காவலர் ஒரு புறம்!
கவலை நிறைத்து,
உறவுகள் தேடிக்
களைத்தவர் ஒரு புறம்!
நிகழ்வுகளின் தாக்கத்தில்
நின்றவர் ஒரு புறம் என
பாலாவைச் சுற்றிலும்
போர்க்களக் காட்சிகள்.
இதயத்துடிப்பு
நின்று போனவனாய்
பாலா
தன் காதல் பறவையை
அநிச்சயமாய்த் தேடினான்.
திரையரங்கில் இருந்தவர் எல்லாம்
இறந்தவரே என
கண்டவர் சொன்னது
பாலாவின் மனதில்
நம்பிக்கை வேர்களை
அசைத்துப் போட்டது.
பிரியமானவள் இங்கு
இருந்ததும் அறிந்திலன்
இருப்பதும் அறிந்திலன்
இமைகள் விழித்திருந்தும்
குருடனாய் உணர்ந்தான்.
இயலாமையில்
இலக்கில்லாக் கோபம்
இளைஞனைச் சுட்டது.
காதல் பெண்ணைக்
காணது செய்த
பணியின் மீது
திரும்பிய கோபம்
தன்னுள் இருப்பவளைத்
தேடும் எண்ணத்தில்
தணிந்து போனது.
இதயம் ச்ீராக்கிச்
சாத்தியங்கள் சிந்தித்தான்
நிச்சயித்து போல்,
கிளம்புமுன்
சேதி தெரிவிக்க
அழைத்தாளில்லை!
தவிக்க விடுதல்
அவள் தனிக்கலைதானே எனும்
எண்ணம் துளிர்த்ததை
துடைத்தெறிந்தான்.
காதல் பெண்
களம் வந்திருக்கலாம்,
வந்தவள் மீண்டிருக்கலாம்
மீண்டவர் இல்லையெனும்
சேதி உண்மையெனில்
என்னவளைத் தொலைத்தேனோ ?
அறிவு நினைத்ததை
இதயம் மறுத்தது.
காலதாமதத்தால்
கிளம்பு முன்னர்
கலவரம் அறிந்து
வராமல் இருந்து
உயிர் காத்திருக்கலாம்!
எப்படியாயினும்
தொடர்பு கொள்ள
முயன்று கொண்டிருக்கலாம்!
தன்னுள் இருக்கும்
அவள் உயிர்க்கு
தானறியாது
சேதம் இருக்காதென
காதல் மனதில்
உறுதி கொண்டு தன்
அலுவல் நோக்கி,
விவரம் அறிய
விரட்டினான் வாகனம்!
**
கோபால்.
***
Gopal Srinivasan gopal@asdc.co.in
Xavier_Dasaian@efunds.com
- காதல்
- அவரவர் வாழ்க்கை
- அறிவியல் மேதைகள் பிதாகரஸ் (PYTHAGORAS)
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் [Copernicus] (1473-1543)
- இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது
- நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி
- மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘)
- சான்ாீஸ் மலை அழகி
- கண்களே! கண்களே!
- சிறப்பு தள்ளுபடி
- சொந்தம்
- அன்பிற்கோர் அஞ்சலி..
- காதலும் சிகரெட்டும்
- கிராமத்து அதிகாலை
- சிவராமனின் சோகக் கதை
- வரவிருக்கும் தண்ணீர் போர்கள் – இறுதிப்பகுதி
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது
- தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது
- பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை
- ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி
- இந்த வாரம் இப்படி – டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை)
- பனி தூவும் பொழுதுகள்…!
- விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.
- பாரதி தரிசனம்
- சொல்லயில்
- காலம் வெல்லும் கலைநெள்ளி
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 8 – தொடர்கவிதை