சேவியர்
7
புயல் ஒன்று
நுரையீரலில் நுழைவதாய்
மூச்சிரைத்தது
பிரியாவிற்கு.
வியர்வை ஆங்காங்கே
சொல்லிக் கொள்ளாமல்
முளைக்க,
சோபாவில் சாய்ந்தாள்.
ஏன் சீக்கிரம் என்ற
அம்மாவின் கேள்விக்கு,
வார்த்தையில்லாத
ஓர் பதிலைச் சொல்லி
நெற்றியைத் தேய்த்தாள்.
அதற்குள்
அந்த விபரீதம்
தொலைக்காட்சி வழியாய்
வீடுகளில்
தலைநீட்ட,
பதட்டத்தின் நுரைகளால்
அறைகளும் நிறைந்தன.
தொலைக்காட்சி பார்த்த
பிரியா பயந்தாள்,
எங்கும் சிதறி ஓடும் கூட்டம் !
பகைவனாய் படரும்
புகை.
திரையரங்கு வாசலில்
குருதித் தோரணம்.
பாலா ?
நீ எங்கே இருக்கிறாய் ?
அனிச்சைச் செயலாய்
விரல்கள் கடிபட்டன.
ஒரே ஒரு வார்த்தை
பேசு என் பிரியமே,
ஹலோ .. மட்டும் சொல்லிவிடேன்.
உனக்கு ஏதும் ஆகியிருக்காது,
ஆகியிருக்கக் கூடாது.
மனம் இடைவிடாமல்
இறைவனைக் கெஞ்சியது.
பாலா,
காத்திருக்கும் வினாடிகள்
இத்தனை கடுமையானவையா ?
நான்
போன் செய்யாத பொழுதுகள்
உனக்குள்
பரபரப்பு இரயில் ஓடுமா ?
என் தண்டவாளங்களில்
ஒரு முறை தரிசனம் தாயேன்,
ஒரே ஒரு முறை
என் தொலைபேசியை
துயிலெழுப்பேன்.
பிரியா வின் பதட்டம்
மெல்ல மெல்ல விட்டம் தொட்டது.
அவசரமாய் பாலாவில்
அலுவலகம் அழைத்தாள்..
எடுப்பார் யாருமின்றி
அடித்துக் கிடந்தது அது.
நிழலின் அருமை
வெயிலில் தெரியுமாம்,
எனக்கு
வெயிலின் கொடுமை
வெயிலிலேயே தெரிகிறதே.
நீ
இல்லாத வாழ்வு.. என்னும்
நினைவுகளே நகர மறுத்தது.
சக்கரம் இல்லாத
தேருக்கேது ஊர்வலம் ?
எத்தனை முறை
அவனை வரச் சொல்லி
நான் வராமலிருந்திருக்கிறேன்.
எத்தனை முறை
தொலைபேசியை
தொடாமலிருந்திருக்கிறேன்.
அமிலத்தின் வலி
அதில்
அமிழ்ந்தால் தானே,
வேர்களில் பாதரசம் பாய்ந்தால்
கிளைகள் எப்படி
கிளிகளைத் தேடும் ?
வெண்ணை திருட வாராயோ
என்
கண்ணைத் திருடிய
கண்ணனே…
பிரியாவுக்கு கண்கள்
கசிந்தன.
இமை தாங்கிய கண்ணீர்
சுமை தாங்கியாய்
கனத்தது.
உன்னோடு
சண்டையிடுவதே எத்தனை
சந்தோசமானது ?
எத்தனை
நித்திரை கத்தரித்திருக்கிறாய்
கனவுகளில் வந்து.
என்
ஒவ்வோர் சிரிப்புக்குப் பின்னும்
மெல்லமாய் புகழும்
செல்லமான உன் வார்த்தைகள்,
கவலை சரிவுகளில்
சறுக்கினால்
கைப்பிடித்து கரையேற்றும்
உன் தோழமை.
கண்ணிமையில் கவிழ்ந்தாலும்
மாறாத உன்
கண்ணியம்…
என்
அத்தனை உறவினர்க்கும்
பின்னால் வந்து
அத்தனை உறவையும்
பின்னால் தள்ளியவன் நீ.
இனி உன்னை
வருத்தப்பட வைக்கமாட்டேன்,
ஒரே ஒரு முறை
எனக்காக போன் செய்.
ராட்சசச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்ட
சின்னச் சிட்டுக் குருவியாய்
பிரியாவின் உயிர்
சிறகடித்துக் கிடந்தது
– சேவியர்
Gopal – gopal@asdc.co.in
Xavier – Xavier_Dasaian@efunds.com
- வினை
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஊடறு – ஓர் பார்வை
- பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)
- கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்
- ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- நாற்காலி
- இரண்டு ஹைக்கூக்கள்
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
- இரண்டு கவிதைகள்
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)