ஜடாயு
விளங்காப் புதிர்கள் விளங்கி விடும்
விடைகள் உடனே கிடைத்து விடும்
களங்கமிலா உன் முகம் கண்டால்
கவலைகளெல்லாம் பறந்து விடும்
சின்னக் கைகள் நீ அசைத்தால்
சிறகடித்தென் மனம் பறக்கிறது
கன்னம் குழிய நீ சிரித்தால்
கண்ணன் திருமுகம் தெரிகிறது
அழகி உன் சிறு புன்னகைக்கு
ஆயிரம் கோடிகள் இணையில்லை
மழலைக் குரலின் மாயம் போல்
மயக்கும் இசையும் இங்கில்லை
பிஞ்சுப் பாதம் தீண்டுகையில்
பிறவிப் பயனை எய்திவிட்டேன்
கொஞ்சி எடுத்து அணைக்கையிலே
கோடி சுகங்கள் பெற்றுவிட்டேன்
தத்தித் தவழ்ந்து நடந்து வரும்
தங்கத் தாமரைப் பூவோ நீ ?
எத்தனை எண்ணிப் பார்த்தாலும்
எழுத்தில் அடங்காக் கவிதை நீ
முன்பல் இரண்டுடன் முறுவலிக்கும்
முக்கால் வயது முழுநிலவே
இன்பக் கதைகள் உன்னைப்போல்
எவரால் சொல்ல முடியுமடி ?
jattaayu@hotmail.com
- வேதாளம் கேட்ட கதை
- இன்று நாமும் குழந்தையும்
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- Europe Movies Festival
- வேண்டுதல்
- பனி
- உலகம் உன்னை….
- காலமும் பயணியும்
- நிலவு
- நான் நானாக …ஒரு வரம்
- அநாதை
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- Europe Movies Festival
- கள்ளர் சரித்திரம்
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- இவள் அவளில்லை ?.
- முக்கால் வயது முழுநிலவு
- அப்பா!
- தாமதம்
- சர்க்கரை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6