ஆனந்தன்
ஆங்கிலேயனுக்கு
அடிமைப் பட்டு
ஆண்டுகள் சில உருண்டன
அடிமைத்தனத்தில்…
காகங்களும்,
கிளிகளும் கூட
கிளைகளில் கூடுகட்ட
கடினப்பட்ட நாட்களது.
உயிரைக் கூட
உன்னதமாக எண்ணாது
உழைத்து வாங்கித் தந்த
உன்னத சுதந்திரம் இது.
பஞ்சப் பட்டினியை மட்டும்
பற்றாக் குறையின்றி
பக்குவமாய் சேர்த்து வைத்த
நாடிது.
மக்கள் தொகை
மகத்தாய் பெருக,
நிற்கக் கூட
நிழலில்லாமல் போனது…
நிழலுக்கு வேண்டுமானால்
குடை விாிக்கலாம்
மழைக்கு என்ன
மாயமா செய்ய முடியும் ?
ஆயிற்று
ஆண்டுகள் நூறு
பூமியில் பிறந்தேன்
என்று பேரு…
என்னையும் வெட்ட
என்றேனும் ஒரு நாள்,
தேதி குறிக்கப் படலாம்
என் மரண நாளாய்…
செடிகளை விதைத்து
மரங்களை பயிாிடுங்கள்,
மக்களே…
மழைக்காக இல்லாவிட்டாலும்
பறவைகள் வீடுகட்ட!
***
ஆனந்தன்
k_anandan@yahoo.com
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- விழி, மொழி, பழி
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- மெக்சிகோ பாணி கோழி டாக்கோ
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- சென்னை நாடக சந்திப்பு
- திருமாவளவன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆதங்கம்..
- காவிரீ!
- கனடாவில் வீடு
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- மன்னியுங்கள், ஞாநி
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- சென்னை நாடக சந்திப்பு
- சின்னப் பயல்கள்
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- நீ.. நான்… அவன்…
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- சகடையோகம்