நந்தா, வேலூர்
இருண்டால்
இரவு என்பது கணக்கு – கண்கள்
இருண்டே இருப்பது எங்கள் வழக்கு
சோகம்
எங்களை பிரிந்ததில்லை.. அதனால்
எங்கள் பிரிவுகளில் ஏனோ சோகம் இல்லை
ஜனனம்
எமக்கு கடுஞ்சாபம்
உடன் துரத்தும்
மரணத்தின் தீரா தாகம்…
எம் வாழ்வினின்று
அகன்றது மகத்துவம் – முடிவில்
பட்டினியின் பிடியில் கண்டோம் சமத்துவம் !
இன்று
உலகெங்கிலும் எங்கள் அறிகுறி…
சோமாலியா எங்கள் முகவரி!
கனவுகள் சிதைந்தாலும்
கண்ணீர் வறண்டாலும்
காலம் விடுவதாய் இல்லை…
உறவுகள் சிதைந்தாலும்
உணர்வுகள் தொலைந்தாலும்
உணர்ச்சிகள் அழியதாய் இல்லை…
உணர்ச்சியின் வடிகாலாய் உறவுகள்
உறவுகளின் உருக்களாய் புதுவரவுகள்
மொட்டு
மலர்ந்தாலே சிறப்பு!
மலர்ந்தும் மலராமல் – இங்கு
மழலைகளின் தவிப்பு!
பிரிதோர் உலகில் –
இங்கும் அங்கும்
நதிகள் கடலில் பாயும்…
வசதிகள் மிகுந்தும்
தேடலில் மனம் அலைபாயும்…
எம் வாழ்வு –
இருண்டாலும் மருண்டாலும்
பொழுது சாயும்,
உடல் உள்ளம்
முழுவதும் காயம்…
வேற்றுமை உலகம் –
காலம் செய்யும் மாயம் !
***
kanthimagan@yahoo.co.uk
- நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)
- அறிவியல் மேதைகள் – சலீம் அலி (Salim Ali)
- பூமியின் இரண்டாவது சந்திரன் – க்ருய்த்னே(Cruithne)
- ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை
- உருளைக் கிழங்கு பை(Pie)
- காலத்தை பின்னோக்கும் நிழல் -சிாிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம்
- பசி என்னும் அரக்கன் (எனக்குப் பிடித்த கதைகள் – 28 -கிஷன் சந்தரின் ‘நான் யாரையும் வெறுக்கவில்லை ‘)
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 21 , 2002
- யதார்த்தம்…
- என்ன அழகு ?
- விடியலைத் தேடி…
- மின் பின்னியதொரு பின்னலா ?
- பஞ்சவர்ணக்கிளியே
- இந்தியாவின் முதல் ரேடியோ விஞ்ஞானி ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் (1858-1937)
- மனிதமறை
- மணவை முஸ்தபாவின் கண்டுபிடிப்பு: ஆதாமும் ஏவாளும் பச்சைத் தமிழர்கள்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 21 2002
- விநாயக தாமோதர சவார்க்கர் – பிரச்சாரமும் உண்மையும்
- மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்
- தேவதேவன் கவிதைகள் — 6 குடும்பம்
- பூரணியின் கவிதைகள்
- அக்கரைப் பச்சை
- என்னுடைய காணி நிலம்
- “க்ருஷாங்கினி” யின் கவிதைகள்
- இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!
- இயல்பாய் – கொஞ்சம் குறும்பா
- ஏன் ?
- நீங்க, நல்லவரா ? கெட்டவரா ?