வை. ஈ. மணி
விதியால் வந்த வினையென்பர்
….. விண்ணில் கோட்டை கட்டுபவர்
மதியால் விளைவை ஆய்ந்தறிவர்
….. மடமை வினையை வழக்குமென (1)
சதிபோல் தோன்றும் விதியேநம்
….. துன்பம் தீர்க்கத் துணையாகும்
முதியோர் உணர்ந்த இவ்வுண்மை
….. வடிவம் கொண்ட கதையிதுவே (2)
அரசன் நாட்டின் நிலையறிய
….. அழைத்துச் சென்றான் மந்திரியை
மரங்கள் அடர்ந்த காட்டினிலே
….. மன்னன் கேட்டான் யோசனைகள் (3)
பாதை தவறிச் சென்றவர்கள்
….. பதறிப் புதரில் சிக்கினரே
காதை முட்கள் கிழிக்க(அ)ரசன்
….. குமுறித் தனது விதிநொந்தான் (4)
நடுங்கும் குளிரில் நடுநிசியில்
….. நடந்து மேலும் செல்லுகையில்
தடுமா றிப்பாழ் கிணறொன்றில்
….. தவறி வீழ்ந்தான் அமைச்சனவன் (5)
மிகவும் நொந்த மன்னனிடம்
….. வருத்தம் கொண்ட மந்திரியும்
நிகழ்ந்த தெல்லாம் நன்மைக்கே
….. நம்பும் என்று நவிழ்ந்தனனே (6)
வீண்டும் வேந்தன் வழிநடக்க
….. முன்னில் வந்த அரக்கர்கள்
உண்ண உணவு உறுதியென
….. ஓலமிட் டவனைச் சூழ்ந்தனரே (7)
வலையில் வீழ்ந்த மானைப்போல்
….. மருண்டு நின்ற மன்னனது
தலையைத் தாக்க முன்வந்த
….. துட்டன் காதில் குறைகண்டான் (8)
உடலில் ஊனம் உற்றவரை
….. உண்ப துசிதம் அன்றென்று
தடங்கல் நேரச் சினம்கொண்டு
….. தூற்றிக் கொண்டு சென்றனரே (9)
உயிர் பிழைத்த மன்னன்பே(ர்)
….. ருவகை பூத்து மந்திரியின்
உயிர் காக்கத் துணைதேடி
….. ஊரை நோக்கி விரைந்தனனே (10)
அரசன் ஆழ்ந்தான் சிந்தனையில்
….. அமைச்சன் கூற்றின் பொருள்தேடி
விரைவில் வந்தான் மந்திரியும்
….. வாழ்த்த மன்னன் புகழ்பாடி (11)
இயலா விதியின் குறியறிய
….. இன்னல் போலத் தோன்றிடினும்
நியதி நிலைக்கக் காரணமாய்
….. நன்மை பயக்கச் செய்திடுமே (12)
வை. ஈ. மணி
- நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
- விதி
- பூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்
- அறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)
- ‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்
- ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)
- சைவ சில்லி (chili)
- ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)
- ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)
- மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)
- கேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி ?
- காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்
- அந்த அக்கினியை ருசிபாருங்கள்
- மறு பிரசவம்
- ஆடு புலி ஆட்டம்
- நிலை
- ‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்
- ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்
- சீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)
- சுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் ?
- சிறுபான்மையினர் கல்விநிலையங்கள்
- தமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி
- பருவ காலம்
- நடை பாதை
- மனிதக் கறை!மனித அக்கறை!
- சீதை
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- சொர்க்கமாயும் சில கணங்கள்.