ஆனந்தன்
விடியற்காலை
காகங்கள் கரைவதால்
கண் விழிப்பேன்!
அடுத்துக் கடக்கவிருக்கும்
அந்த இரயிலுக்காய்
ஆண்டுகள் பாதி
கருகும் வரை
காத்திருக்க வேண்டும்!
ஓசை எழுப்பி
ஊரையும் எழுப்பி
வேகமாய்ச் செல்லும்
சில இரயில்கள்
என்றும் மதித்ததில்லை
இந்த நிறுத்தத்தை.
நிற்கும் சில இரயில்களிலும்
பயணிகள்
இரங்குவதும் இல்லை
எனக்கு கூலி
கிடைப்பதும் இல்லை!
சச்சரவுகள் செய்து
கூட்டமாய் வரும்
குடும்பங்கள் சில!
படிக்கும் புத்தகத்தில்
பாதி ஆயுளைக் கழிக்கும்
பரம யோகிகள் சிலர்!
ஓடியாடும்
சிறுவர்கள் சிலர்!
உலகை மட்டும் அல்ல;
தன்னை எரிக்கும்
சூரியனையும் மறந்து
மனம் மகிழும்
காதலர்கள் சிலர்!
என்று பலர் காத்திருக்க
எப்பொழுதும்
தாமதமாக வரும் இரயில்
இப் பொழுது மிகவும்
தாமதமாக வருமோ ?
அடுத்து வரும் இரயிலுக்காய்
எட்டிப் பார்த்தேன்
கண் பார்வையின்
எல்லை வரை
எதுவும் தென்படவில்லை !
பிரசவத்திற்காய்,
அந்த இரயிலில் வரும்
என் அருமை
மகளைத் தவிர!
ஆனந்தன்
14th Aug 2002
- நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
- விதி
- பூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்
- அறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)
- ‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்
- ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)
- சைவ சில்லி (chili)
- ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)
- ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)
- மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)
- கேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி ?
- காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்
- அந்த அக்கினியை ருசிபாருங்கள்
- மறு பிரசவம்
- ஆடு புலி ஆட்டம்
- நிலை
- ‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்
- ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்
- சீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)
- சுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் ?
- சிறுபான்மையினர் கல்விநிலையங்கள்
- தமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி
- பருவ காலம்
- நடை பாதை
- மனிதக் கறை!மனித அக்கறை!
- சீதை
- தேவதேவன் கவிதைகள் 3 . பறவை
- சொர்க்கமாயும் சில கணங்கள்.