மனைவி…

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ஆனந்தன்


அழகிற்குத் தவமிருந்தேன்..
அன்பாய் நீ வந்தாய்…
பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன்
பாசத்தில் நீ அரவணைத்தாய்….

சிந்தனையில்
சிலை வடித்தேன்,
சிற்பியாய்…
கற்பனையில்
கவி படைத்தேன்,
கவிஞனாய்…
அந்த பிரம்மனையும்,
கம்பனையும்
மிஞ்சி விட…
என் தேவதையாய்
உனைக் காணும் முன்.

சிறு குறும்புகள் செய்து
சிறு பிள்ளையானேன்!
சச்சரவுகள் செய்து
சிறு சண்டைகளிட்டேன்….
எப்பொழுதும் புன்னகை சிந்தி
எனை ஆட்கொண்டாய்…

விட்டுக் கொடுத்தலுக்கு
தண்ணீர் குடிக்காமல்
உயிர் துறந்த
கதையில் வரும்
மான்கள் மட்டும் அல்ல,
கண்ணே…
நாம் கூட
ஓர் உதாரணம் தான்!

புன்னகை பூத்த – உன்
முகம் தெரிந்தால் – என்
கோபம் கூட
கோணி நிற்கும்…

காமதேனும் தேவையில்லை
என் அருகே
நீ இருந்தால்..

ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation

author

ஆனந்தன்

ஆனந்தன்

Similar Posts