வை. ஈ. மணி
அன்புற் றீந்தான் இறைவனவன்
…. அகிலம் முழுதும் அழகினையே
இன்பம் பெறவே மனிதற்கு
…. இரண்டாய் அதனைப் பாகித்தான் (1)
ஒன்று அகமென் றறிந்திடுவோம்
…. ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்
மின்னல் போன்றே நொடியதனில்
…. மறையும் மற்றது புறத்தழகாம் (2)
புறத் தழகு புலனீர்க்கும்
…. பழகின் அழிவது நிச்சயமாம்
நிறமில் லாஅகத் தழகென்றும்
…. நற்குண மாகத் திகழுமன்றோ (3)
அழகாம் அர்கதை யுற்றோர்க்கு
…. அளிக்கும் நன்கொடை கரங்கட்கு
அழகே தலைக்கு முதியோர்க்கு
…. அன்பு டனாற்றும் பாதசேவை (4)
இழுக் கிலா ஒழுக்கமதே
…. ஈன்றிடும் அழகு மனத்திற்கு
வழுவா துண்மை உரைப்பதுவே
முகத்திற் கழகு தந்தருளும் (5)
***
- பேரன்
- சக்கரம் இல்லா தேர்கள்…
- உன் கூந்தல்!
- அறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)
- அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது
- அவியல்
- பறங்கிக்காய் பால் கூட்டு
- எனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)
- காந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)
- தூரத்திலிருந்து பார்த்தேன்
- பாப்பா பாட்டு
- ஆசை
- ஊடகம்
- புத்தாண்டுப் பொலிவு
- கவலையில்…
- அழகு
- உயிர்
- ஜெயமோகனுக்கு மறுப்பு
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்
- 7 அனுபவ மொழிகள்
- பொறாமை
- இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2
- யாரைத் தேடி ஒடுகிறது நதி ?
- இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- இன்னும் ஓர் தீர்மானம்
- மரண வாக்குமூலம்.
- தொலைந்து போனோம்.
- இன்னொரு இருள் தேடும்….