மரண வாக்குமூலம்.

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

எஸ். வைதேஹி.


வார்த்தைகள் யில்லாமல்
ரகசியம் பேசியது,
சாகும் போது
நான் பார்த்த
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சி.

அம்மாவின் கறுப்பு நிற
சீலையில் நழுவிடும்
ஒற்றை நிலா முகம்
கரைந்து போனது.

பழைய நினைவுகளை
விரட்டி விரட்டி
நான் தேடிய அடையாளங்கள்
காணாமல் போயின.

எனைப் பார்க்கும்
என் உறவின் கண்களில்
அழியும் என் மூலக்கூறுகள்.

தூரத்து ரெட்டை நட்சத்திரங்களுக்கு
நடுவில் நான் சிரிப்பேன் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
தரைக்கும் எனக்குமான உறவு சரிந்து
ஈரமான காற்றின் நடுவில்
பறந்து கொண்டிருக்கிறேன்,
நேற்று கரைசல் மணல் அருகே
நானும் நீயும் சிரித்தபடி நழுவ விட்ட காற்றாடி போல்.

****

Series Navigation

author

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

Similar Posts