பொன். முத்துக்குமார்
‘எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ‘
களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்;
‘என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ?
சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ‘
என்றபடி பவ்யமாய் விசாரிப்பார்
கோயிலுக்கு மரம்கொடுக்க
அனுமதியின்றி எங்கள்
கூரைவீட்டுக் கொல்லைக்குள் புகுந்து
மரம் வெட்டிய விவகாரத்தில்
அப்பாவை ‘போடா ‘ என்று விளித்து
என் பதினைந்து வயதில்
என்னிடம் அறைவாங்கி
என்னை உதைத்த
கலியமூர்த்தி;
‘நல்லா யிருக்கியாப்பா ?
அண்ணன் சொன்னான் நீ வந்திருக்கிறதா ‘
என்றபடி ஈரமாய் குசலம் விசாரித்த –
ஓய்வுபெற்றபிறகு
வெறுமையும், தளர்வுமாய்
முன்பற்களிழந்து வலம்வரும் –
கன்னத்திலறைந்து
குவியதூரம் போதித்த
எட்டாம் வகுப்பு ராஜாராமன் சார்
டிகிரி படித்துவிட்டு
ஊர்சுற்றிக்கொண்டிருக்கும்
தன் மகனை நினைவுபடுத்துவார்.
‘கொளத்தங்கர வாத்யார் பையன்;
என்னடா பொடியா எங்க வந்த ? ‘
என்று
நான் டவுசர் நழுவும் வயதில்
டயர் உருட்டிக்கொண்டு போன
அக்பர்பாய்கடையில் விசாரித்த
விடலைகள் தற்போது
புன்னகையோடு வணக்கம்வைத்து
தலையாட்டி
வேகமாய் சைக்கிள் மிதித்துப்போகும்.
யிவ்வளவுக்குமிடையில்
வெளிதேசத்திலிருந்து
வருடங்கள் கடந்து
ஊர்திரும்பியிருக்கும் நான்.
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை