சேவியர்.
சந்துகளுக்குப் பின்
ஓர்
சுடலைமாடன்,
ஆளுயர அரிவாளோடு.
அகல விரித்தக் கண்கள்,
உறைந்த நிலை உதடு,
முறுக்கி இறுக்கிய மீசை,
மடித்துக் கட்டிய
மண் நிற வேட்டி.
சோறுண்ண மறுத்த
மழலை ஒன்றுக்கு
பயமுறுத்தும் உருவமாய்,
கண்ணாமூச்சி ஆடிய
மூன்றாம் வகுப்பு
மாலை நேரங்களில்
ஓளிந்து கொள்ளும் ஓரிடமாய்,
நண்பர் சந்திப்புக்களில்
அடையாளம் சொல்லும்
கலுங்காய்,
ஆற்றுத் தண்ணீரை
இடுப்பில் சுமந்துவரும்
தாமரைகளை
விடலைப்பையன்கள்
வெறித்துப் பார்க்கும் இடமாய்,
அந்த ஒரு சிலையை
ஆளாளுக்கு
அர்த்தப் படுத்தினார்கள்,
தேவைக்கேற்ப
மொழிபெயர்த்தார்கள்.
பட்டம்மா பாட்டி மட்டும்
பல கதை சொல்வாள்,
ஊரைக் காத்த
உருக்கு மனிதன் சுடலையின்,
சுண்டாத அரிவாள் முனை பற்றி.
ஒரு,
வெள்ளிக் கிழமையின்
இருள் பொழுதில்,
ஒரு
பாலியல் பலாத்காரம்
சுடலைச் சிலை மறைவில்
மனிதாபிமானத்தைக் கசக்கிப் போட்டது.
காங்கிரீட் கால்களோடு
அறையப்பட்டிருக்கிறான்
சுடலை
கையில் ஆளுயர வாளோடு.
காவலுக்காய்.
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை